இந்திய விமான நிறுவனத்தில் 713 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய விமான ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்று கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் மல்டி டாஸ்கர், செக்யூரிட்டி ஸ்கிரீனர், மேனேஜர், சீனியர் எக்சிகியூட்டிவ், அசிஸ்டன்ட் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 713 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு மட்டும் 419 இடங்களும், மல்டி டாஸ்கர் பிரிவில் 283 இடங்களும், மேலாளர் பணிக்கு 11 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. மேலாளர் தரத்திலான பணிகளில் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மற்ற பணிகளில் தகுதியும் உள்ளவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
கல்வித் தகுதி
சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ. படித்தவர்கள் மேலாளர் தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கர் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை டி.டி. (வரைவோலை) ஆக இணைக்க வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி தேவையான சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் டிசம்பர் 9-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://aaiclas-ecom.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment