Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

வேலை - கால அட்டவணை - 04 FEBRUARY 2019

  1. ரெயில்வே தேர்வு : சில அடிப்படைகள்
  2. ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in
  3. TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
  4. IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 466 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.03.2019. இணைய முகவரி : www.iocl.com
  5. FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.
  6. NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in
  7. UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in
  8. SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.
  9. RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ASST உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,30,000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : LATER . இணைய முகவரி : www.rrbchennai.gov.in.
  10. SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
  11. GAIL RECRUITMENT 2019 | GAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்ஸிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 27 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-03-2019.

Share:

ரெயில்வே தேர்வு : சில அடிப்படைகள்

ரெயில்வேயில் பணியாற்றுவது என்பது பல இளைஞர்களின் லட்சியமாக உள்ளது. உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இந்திய ரெயில்வேதுறை விளங்குகிறது. பல லட்சம் ஊழியர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். தற்போது மேலும் 1.3 லட்சம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 90 ஆயிரம் பணியிடங்களை அறிவித்ததும் நினைவூட்டத்தக்கது. ரெயில்வே போட்டித் தேர்வில் வெற்றி வாய்ப்பு பெறுவது பற்றி இங்கே பார்க்கலாம்... சிவில் சர்வீஸ் தேர்வு, வங்கித் தேர்வு, தமிழக அரசுப் பணித் தேர்வுகளை ஒப்பிடும்போது ரெயில்வே தேர்வுகள் சற்று எளிமையானவைதான். அதனால் போட்டியிடுவோர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். அது பணியைப் பெறுவதில் சவாலை ஏற்படுத்தும். இருந்தாலும் விடா முயற்சியால், தொடர் பயிற்சியால் வெற்றி பெற்றுவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே ரெயில்வே தேர்வுகள் நடந்தன. 2014 முதல் இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளிலும் இந்த தேர்வை எழுத முடியும். அதன்படி தமிழிலும் தேர்வை எழுதலாம். இதற்காக அந்தப்பகுதி பிராந்திய மொழியில் வினாத்தாள் அச்சிடப்படும். தெற்கு மண்டல வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் அச்சாகிறது. தங்கள் தாய் மொழியில் தேர்வை எழுதுவது ஏராளமானவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பணியிடங்கள் குரூப்-டி வகையின் கீழ் வருபவை. குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைவரும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். வினாத்தாள் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) விடையை தேர்வு செய்து குறிப்பிடும் வகையில்தான் அமையும். பொது அறிவுப் பகுதியில் கணிதம், புவியியல், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும். விடைத்தாளைக் கொடுத்ததும், ஓ.எம்.ஆர். சீட்டை நிரப்புவதற்குமுன் அனைத்து வழிகாட்டுதல்களையும் கூர்ந்து படிக்க வேண்டும். விவரங்கள் புரியாமல் இருந்தால் தேர்வாளரிடம் கேட்டுக் கொள்ளலாம். வினாத்தாளைத் திறக்கச் சொன்ன பிறகே வினாத்தாளை திறக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிலும் ஒரே ஒரு சரியான விடைதான் இருக்கும். தவறான விடையைத் தேர்வு செய்தால் மதிப்பெண் குறைக்கப்படும். எனவே நன்கு விடை தெரிந்தால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். யூக அடிப்படையிலான பதில், சரியான பதிலின் மதிப்பெண்ணையும் இழக்கச் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை. சில பணிகளுக்கு உடல் தகுதி தேர்வு முறை பின்பற்றப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களே அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆண்களுக்கு 1000 மீட்டர் ஓட்டம், 4 நிமிடம் 15 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும்; பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டம். 3 நிமிடம் 10 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். ரெயில்வேயில் பணி பெற்றுவிட்டால், நல்லதொரு வாழ்க்கைப் பாதை அமைவதுடன் பல்வேறு சலுகைகளையும் பெற முடியும். ரயிலில் பயணம் செய்வது உள்பட பல்வேறு சலுகைகள் ரெயில்வே பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ரெயில்வே தேர்வு, பணியின் தரத்திற்கேற்ப இருந்தாலும், அதிகமான போட்டியாளர்களை வடிகட்டும் வகையில் நடத்தப்படுவதால், சவாலாகவே இருக்கும். கடுமையான முயற்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது. சில அன்றாட நடைமுறைகளை கடைப்பிடித்தால்தான், வெற்றி கைகூடும். ‘குரூப் ஏ, பி’ பணிகள் சற்று சவாலானவை. கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். முதல் கட்ட தேர்வுக்குப் பின்னா், கணினி அடிப்படையிலான இரண்டாம் கட்ட தேர்வும் நடத்தப்படும். இரண்டிலும் தேர்ச்சி பெறுவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். சில தொழில்நுட்ப பணிகளுக்கு அது தொடர்பான தேர்வுகள் நடத்தப்படும். சில பணிகளுக்கு உடல்தகுதி சோதிக்கப்படும். மருத்துவ பரிசோதனையும், சான்றிதழ் சரிபார்த்தலும் நடைபெறும். தேர்வில் வெற்றி பெற நாள்தோறும் பத்திரிகைகளை படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை அறிய இது உதவும். மேலும் தேர்வு தொடர்பான பாடப்பகுதிகளை படிக்க நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தேவையானவற்றை குறிப்பு எடுக்க வேண்டும். இது அடிப்படையாகும். படித்த பாடத்தையே மீண்டும், மீண்டும் படிப்பது நினைவில் ஏற்ற அவசியமாகும். தேர்ச்சியையும் எளிமையாக்கும். தேர்வில் குறித்த நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இதற்காக முந்தைய தேர்வுத்தாள்கள் மற்றும் பயிற்சி வினாத் தாள்களைக் கொண்டு மாதிரி தேர்வை எழுதி பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும். முதல்முறையாக தேர்வை எதிர்கொள்ள தயாராகுபவர்கள், பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறலாம். அது உங்கள் அறிவையும், அனுபவத்தையும் பலப்படுத்துவதாக அமையும். வெற்றியை சுலபமாக்கும்.
Share:

ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in

ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக ஈசில் (ECIL) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்களை பயிற்சிப் பணிக்கு அமர்த்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் 57 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 16 இடங்களும், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 22 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 15 இடங்களும், சிவில் பிரிவில் 5 இடங்களும் உள்ளன. இதில் சேர விரும்புபவர்கள் 10-2-2019-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. என்ஜினீயரிங், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். வருகிற மார்ச் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ஐதராபாத்தில் நேர்காணல் நடக்கிறது. 1-ந்தேதி இ.சி.இ. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கும், 2-ந் தேதி இ.இ.இ. மற்றும் சிவில், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கும் நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் நடைபெறும் முகவரி : CLDC, Nalanda Complex, TIFR Road, ECIL, Hyderabad. நேர்காணலில் பங்கேற்க விரும்புபவர்கள் புகைப் படங்கள் மற்றும் குறிப்பிட்ட அசல் மற்றும் நகல் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.ecil.co.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நிலவியல் - சுரங்கத்துறைகளில் அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் பணிக்கு ஆட்கள் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் 10 இடங்களும், பொதுப் பணித்துறையில் 5 இடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறும் குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. எம்.எஸ்சி. ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, எம்.எஸ்சி ஹைட்ரோஜியாலஜி, ஜியோகெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 11-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 466 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.03.2019. இணைய முகவரி : www.iocl.com

IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 466 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.03.2019. இணைய முகவரி : www.iocl.com

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 857 பயிற்சிப் பணிகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 857 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (I.O.C.L.) என அழைக்கப்படுகிறது. உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இது. தற்போது இந்த நிறுவனத்தில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 466 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், பாய்லர், கெமிக்கல், கெமிக்கல் பிளான்ட், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், செகரெட்டேரியல் அசிஸ்டன்ட், அக்கவுண்டன்ட் பணியிடங்கள் உள்ளன. பணிப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அடைப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். கவுகாத்தி, பராவுன்னி, ஹல்தியா, மதுரா, பானிபட், டிக்பாய், பாகாய்கான், பாரதீப் போன்ற சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 28-2-2019-ந் தேதியில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பி.எஸ்சி. அறிவியல் பட்டப்படிப்புகள், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியில் சேரலாம். பி.காம், பி.ஏ. பட்டப் படிப்பு படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் www.iocl.com என்ற இணைய தளம் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் மாா்ச் 8-ந் தேதியாகும். மேற்கு மண்டலத்தில் 391 பணிகள் இதேபோல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேற்கு மண்டலத்தில், டிரேடு மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணிகளுக்கு 391 பேர் சேர்க்கப்படுகிறார்கள். டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில் 228 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 99 இடங்களும் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், பட்டப்படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 24 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள், மார்ச் 7-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள ஐ.ஓ.சி.எல். இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.

FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in. இந்திய உணவு கழகத்தில் 4103 வேலைவாய்ப்புகள் இந்திய உணவுக் கழக நிறுவனத்தில் 4 ஆயிரத்து 103 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய உணவு கழக நிறுவனம் சுருக்கமாக எப்.சி.ஐ. (FCI) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டல கிளைகளிலும் ஜூனியர் என்ஜினீயர், டைப்பிஸ்ட், அசிஸ்டன்ட் (கிரேடு2, கிரேடு-3) மற்றும் ஸ்டெனோ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக தெற்கு மண்டலத்தில் 540 பணியிடங்களும், வடக்கு மண்டலத்தில் 1999 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில் 538 பணியிடங்களும், மேற்கு மண்டலத்தில் 735 பணியிடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 291 பணியிடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஸ்டெனோ பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் அசிஸ்டன்ட் கிரேடு-2 பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் கிரேடு 3 பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-1-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். கல்வித்தகுதி ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினீயாிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், குறிப்பிட்ட அளவில் சுருக்கெழுத்து தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோ (கிரேடு 2) பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தி தட்டச்சுத் திறன் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும், இதர பட்டப்படிப்புகள் மற்றும் பி.இ., பி.டெக் படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் கிரேடு 3 பணியில் வாய்ப்புகள் உள்ளன. கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு வருகிற ஏப்ரல்- மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.fci.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் நேரு யுவகேந்திரா இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் தன்னார்வலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- நேரு யுவகேந்திரா அமைப்பு 1972-ல் தொடங்கப்பட்டது. 1987-ல் நேரு யுவகேந்திரா சங்கேதன் என்ற பெயர் மாற்றத்துடன், தன்னாட்சி அமைப்பாக செயல்பட ஆரம்பித்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது. இளைஞர் மேம்பாட்டிற்காக செயல்படும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக இது விளங்குகிறது. தன்னார்வத்துடன் கூடிய பல்வேறு சமூக பணிகளில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்கிறது. தற்போது இந்த அமைப்பில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தன்னாா்வலா்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். மார்ச் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 15-ந் தேதி தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் மார்ச் 18-ந் தேதிக்குள் தன்னார் வலர் பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தேசத்தின் பல்வேறு அரசு திட்டப்பணிகளின்போது தன்னார்வலர்களாக பணி செய்யலாம். பணிக்கான மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இது பற்றிய விவரங்களை www.nyks.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசின் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.சி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு 896 இடங்களும், வனத்துறை (ஐ.எப்.எஸ்.) பணிகளுக்கு 90 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 21 முதல் 32 வயதுடைய பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 18-ந்தேதி கடைசி நாளாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 02-06-2019-ந் தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1601 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகமாக எல்லை சாலை கழகத்தில் 767 பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இன்று (25-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ASST உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,30,000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : LATER . இணைய முகவரி : www.rrbchennai.gov.in.

RRB RECRUITMENT 2019 | RRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :  JUNIOR ASST உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,30,000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : LATER . இணைய முகவரி : www.rrbchennai.gov.in. வரும் 28-ம் தேதி, பாரா மெடிக்கல் உள்ளிட்ட பணிக்கு மார்ச் 4, தொழில் நுட்பம் பிரிவு வெவல் 1 பிரிவு பணியிடங்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெயில்வேயில் ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிராபிக் அசிஸ்டன்ட், கூட்ஸ் கார்டு, சீனியர் கிளார்க் போன்ற அலுவலக பணிகள், ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் அசிஸ்டன்ட் போன்ற துணை மருத்துவ பணியிடங்கள், டிரான்ஸ்லேட்டர், டிராக் மெயின்டனர் போன்ற பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்திற்கு மட்டும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது, கல்வித்தகுதி வேறுபடுகிறது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பணிகளுக்கும் வெவ்வேறு தேதியில் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இது பற்றிய விவரங்களை அந்தந்த மண்டல ரெயில்வே ஆட்தேர்வு ஆணைய இணையதளத்தில் பார்க்கலாம். இது பற்றிய விவரங்கள் பிப்ரவரி 23-மார்ச் 1 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது..
Share:

SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.

SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019. 
எஸ்.இ.சி.எல். எனப்படும் தென்கிழக்கு பிராந்திய நிலக்கரி நிறுவன கழகத்தில் தற்போது மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிாிவினருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும் 33 வயதுக்கு உட்பட்ட ஓ.பி.சி, பிரிவினரும், 35 வயதிற்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன் மைனிங் சர்வே சான்றிதழ் பெற்றவர்கள் டெபுட்டி சர்வேயர் பணிக்கும், மைனிங் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் மைனிங் சர்தார் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 20-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.secl-cil.in/Default.aspx என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

GAIL RECRUITMENT 2019 | GAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்ஸிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 27 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-03-2019.

GAIL RECRUITMENT 2019 | GAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்ஸிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 27 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-03-2019. 
இந்திய எரிவாயு நிறுவனமான கெயில் நிறு வனம், இந்தியாவின் முன்னணி கியாஸ் நிறுவனமாகும். மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனத்தில் தற்போது கேட் தேர்வு அடிப்படையில் பட்டதாரி என்ஜினீயர்களை எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட என்ஜினீயரிங் பிரிவில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள், இறுதி பருவத் தேர்வை எதிர்கொள்பவர்கள், விண்ணப்பிக்கலாம். கேட்-2019 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்www.gailonline.com என்ற இணையதளத்தில் பார்த்து விட்டு விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசி நாள் 13-3-2019-ந் தேதியாகும்.
Share:

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019.

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ், அதிநவீன கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (சி.டி.ஏ.சி.) செயல்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தின் நொய்டா கிளையில் திட்ட மேலாளர், பொறியாளர், அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 76 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர், அதிகாரி பணிகளுக்கு 50 வயதுடையவர்களும், திட்டப் பொறியாளர் பணிக்கு 37 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ., எம்.டெக் மற்றும் சட்டம், சி.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 25-2-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. திட்ட மேலாளர் மற்றும் திட்ட அதிகாரி பணி களுக்கு மார்ச் 9-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. திட்ட பொறியாளர் பணிக்கு மார்ச் 9-ந் தேதி ஆன்லைன் தேர்வும், மார்ச் 10-ந் தேதி நேர்காணலும் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.cdac.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

UIIC RECRUITMENT 2019 | UIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.

UIIC RECRUITMENT 2019 | UIIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019. 
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைட்டடு இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின், சென்னை கிளையில் அட்மின் ஆபீசர் (மெடிக்கல்- ஸ்கேல்-1) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து, மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் (https://uiic.co.in) பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏ4 காகிதத்தில் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவம், பிப்ரவரி 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
Share:

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 247 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019.

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 247 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019. 
எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப் படுகிறது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக பார்மசிஸ்ட் பணிக்கு 27 இடங்களும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி உள்ளிட்ட பலதரப்பட்ட படிப்பு முடித்தவர் களுக்கும் பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 9-15 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.

NITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019. 
திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. தற்போது இந்த என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வயது - கல்வித்தகுதி இந்த பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 500-ம், மற்றவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-2-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

PNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2019.

PNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2019. 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. தற்போது இந்த வங்கியில் சீனியர் மேனேஜர், மேனேஜர் அண்ட் ஆபீசர் (ஐ.டி.) போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 325 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 165 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 84 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 51 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 25 இடங்களும் உள்ளன. பணிப்பிரிவு வாரியான காலியிடங்கள்: கிரெடிட் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 51 பேரும், மேலாளர் பணிக்கு 26 பேரும், சட்டப் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 55 பேரும், மேலாளர் பணிக்கு 55 பேரும், எச்.ஆர்.டி. மேலாளர் பணிக்கு 18 பேரும், ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 120 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளில் அதிகபட்சம் 37 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை படிப்புகளுடன் குறிப்பிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-3-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 24-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.pnbindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
Share:

CEWACOR RECRUITMENT 2019 | CEWACOR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 571 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2019.

CEWACOR RECRUITMENT 2019 | CEWACOR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 571 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2019. 
மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- சென்டிரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேசன் எனப்படும் மத்திய பண்டகசாலை கழகம், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உணவுப்பொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளை பராமரித்து வருகிறது. மத்திய விவசாயத்துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் சூப்பிரண்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 571 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிக பட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 238 இடங்களும், ஜூனியர் சூப்பிரண்டென்ட் பணிக்கு 155 பணியிடங்களும், சூப்பிரண்டென்ட் (ஜெனரல்) பணிக்கு 88 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ‌ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணி களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 16-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி வேளாண்மை பட்டப்படிப்பு அல்லது உயிரியல், வேதியியல், உயிர் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.காம், பி.ஏ. வணிகவியல், சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் இதர முதுநிலை படிப்பு படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 16-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஆன்லைன் தேர்வு ஏப்ரல்-மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் பற்றிய கடிதம் பின்னர் அனுப்பப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://cewacor.nic.in/index.php என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
Share:

வேலை - கால அட்டவணை - 04 FEBRUARY 2019

வேலை - கால அட்டவணை - 04 FEBRUARY 2019
  1. BSF RECRUITMENT 2019 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.02.2019.
  2. AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நர்சிங் ஆபீசர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1372 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-2-2019.
  3. SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :டெக்னீசியன் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 380 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-2-2019.
  4. INDIA SEEDS RECRUITMENT 2019 | INDIA SEEDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜ்மென்ட் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 260 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2019.
  5. SHIPYARD RECRUITMENT 2019 | SHIPYARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேப்ரிகேசன் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 195 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.02.2019.
  6. ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 737 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
  7. INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :INDIAN ARMY | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 191 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019.

Share:

BSF RECRUITMENT 2019 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.02.2019.

BSF RECRUITMENT 2019 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.02.2019. எல்லைக் காவல் படையில் 1826 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று பி.எஸ்.எப். எனப்படும் எல்லைக் காவல் படை. இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1763 பேர் தேர்வுசெய்யப்படு கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 934 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 398 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 277 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 152 இடங்களும், பெண்களுக்கு 2 இடங்களும் உள்ளன. டெய்லர், சமையல்காரர், முடிதிருத்துனர், சுகாதார பணியாளர், பெயிண்டர், தச்சர், செருப்புத் தைப்பவர், டபுள்யு/சி மற்றும் டபுள்யு/எம்., டிராப்ட்ஸ்மேன் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைபவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பதுடன், பணியிடங்கள் உள்ள பிரிவில் 2 ஆண்டு பணிஅனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், பணியிடங்கள் உள்ள பிரிவில் ஓராண்டு ஐ.டி.ஐ. படிப்பும், ஓராண்டு பணி அனுபவமும் பெற்றவர்கள் அல்லது 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் ( http://bsf.nic.in/ )வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜனவரி 25-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நர்சிங் ஆபீசர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1372 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-2-2019.

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நர்சிங் ஆபீசர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1372 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-2-2019. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு மருத்துவமனைகளில் நர்சிங் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகி உள்ளது. வி.எம்.எம்.சி. அண்ட் சப்தர்ஜங் மருத்துவமனையில் 1272 பணியிடங்கள், கலாவதி சரண் சில்ட்ரன் மருத்துவமனையில் 58 பணியிடங்கள், லேடி ஹார்டிங் மெடிக்கல் காலேஜ் அண்ட் அசோசியேட்டடு மருத்துவமனையில் 42 இடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். வி.எம்.எம்.சி. மருத்துவமனை பணிக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, தேர்வு நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. எனவே அப்போது விண்ணப்பித்தவர்கள் விதிமுறைக்கு உட்பட்டு திரும்ப விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விதிவிலக்கு விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை விண்ணப்பதாரர்கள் படித்து அறிந்து கொண்டு 7-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு பிப்ரவரி 28-ந்தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :டெக்னீசியன் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 380 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-2-2019.

SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :டெக்னீசியன் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 380 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-2-2019. உருக்கு ஆணைய நிறுவனத்தில் 380 பணியிடங்கள் உருக்கு ஆணைய நிறுவன கிளைகளில் 380 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செய்ல் (SAIL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் சேலம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் உள்ளன. தற்போது பொக்காரோவில் உள்ள இரும்பு எக்கு தொழிற்சாலையிலும், பிலாயில் உள்ள இரும்பு எக்கு ஆலையிலும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் கிளையில் என்ஜினீயர், டிரெயினி உள்ளிட்ட பணி களுக்கு 153 பேரும், ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெயினி, அட்டன்ட் கம் டெக்னீசியன் டிரெயினி போன்ற பணிகளுக்கு 275 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 95 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பாய்லர் பணிக்கு 10 பேரும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 121 பேரும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 49 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொக்காரோ பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணிகள் உள்ளன. ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 18-2-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். கல்வித்தகுதி மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிகளுக்கும், மெட்ரிக் தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பாய்லர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மட்டும் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sail.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பிலாய் 153 பணிகள் பிலாய் கிளையில் பயர் என்ஜினீயர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், ஜூனியர் ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், ஜூனியர் மெடிக்கல் டெக்னாலஜிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 153 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு மட்டும் 116 இடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங், நர்சிங் மற்றும், பார்மசி டிப்ளமோ படிப்புகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பயர் என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வும் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும். இந்த பணிகளுக்கு 16-2-2019-ந் தேதிக் குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை https://sailcareers.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

INDIA SEEDS RECRUITMENT 2019 | INDIA SEEDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜ்மென்ட் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 260 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2019.

INDIA SEEDS RECRUITMENT 2019 | INDIA SEEDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜ்மென்ட் டிரெயினி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 260 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.02.2019. தேசிய விதை நிறுவனத்தில் 260 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விதைகள் கழக நிறுவனம் சுருக்கமாக என்.எஸ்.சி.எல். (NSCL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 260 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். அதிகபட்சமாக சீனியர் டிரெயினி (அக்ரிகல்சர்) பணிக்கு 49 இடங்களும், சீனியர் டிரெயினி (குவாலிட்டி கண்ட்ரோல்) பணிக்கு 19 இடங்களும், டிரெயினி (அக்ரி) 45 இடங்களும், டிரெயினி (மார்க்கெட்டிங்) 32 இடங்களும், டிரெயினி (அக்ரி ஸ்டோர்ஸ்) பணிக்கு 16 இடங்களும், டிரெயினி (டெக்னீசியன்) பணிக்கு 16 இடங்களும் உள்ளன. இன்னும் பல்வேறு பணி களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை தெரிந்து கொள்வோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர் 9-2-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அசிஸ்டன்ட் (சட்டம்) பணிக்கு 30 வயதுடையவர்களும், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலென்ஸ்) பணிக்கு 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பி.எஸ்சி. (அக்ரி), எம்.எஸ்சி. (அக்ரி), எம்.பி.ஏ., சட்டம், கணினி அறிவியல் போன்ற பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர் களுக்கும், மெக்கானிக்கல், அக்ரி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 9-ந் தேதி (மாலை 5 .30 மணிக்குள்) விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indiaseeds.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Share:

SHIPYARD RECRUITMENT 2019 | SHIPYARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேப்ரிகேசன் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 195 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.02.2019.

SHIPYARD RECRUITMENT 2019 | SHIPYARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேப்ரிகேசன் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 195 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.02.2019. கப்பல் தளத்தில் 195 வேலைவாய்ப்புகள் கொச்சி கப்பல் தளத்தில் 195 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தளங்களில் ஒன்று கேரள மாநிலம் கொச்சியில் செயல்படுகிறது. கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் எனப்படும் இந்த நிறுவனத்தில் தற்போது பேப்ரிகேசன் அசிஸ்டன்ட், அவுட்பிட் அசிஸ்டன்ட், ஏர்கண்டிசனர் டெக்னீசியன், ஸ்கப்போல்டர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளன. மொத்தம் 195 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக வெல்டர் பணிக்கு 47 பேரும், பிட்டர் பணிக்கு 23 பேரும், பைப் பிட்டர் பணிக்கு 25 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஷீட் மெட்டல் ஒர்க்கர், டீசல் மெக்கானிக், மோட்டார் வெகிகிள் மெக்கானிக், மெஷினிஸ்ட், ஷிப்ரைட், ஸ்கப்போல்டர், சேப்டி அசிஸ்டன்ட் போன்ற பிரிவிலும் பணிகள் உள்ளன. மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13-2-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இணையதள விண்ணப்பம் பிப்ரவரி 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cochinshipyard.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 737 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 737 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 908 வேலைவாய்ப்புகள் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 908 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் மேற்கு மண்டல ஓ.என்.ஜி.சி. கிளையில் 737 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதேபோல சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு மண்டல கிளையில் அசிஸ்டன்ட் டெக்னீசியன், ஜூனியர் பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 86 பேரும், திரிபுரா கிளையில் நான்-எக்சிகியூட்டிவ் பணிக்கு 85 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேற்குமண்டல கிளை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... ஏ1, ஏ2 லெவல் மற்றும் டபுள்யு 1 லெவல் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அசிஸ்டன்ட் டெக்னீசியன், அசிஸ்டன்ட் (டிரான்ஸ்போர்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட்) செக்யூரிட்டி சூப்பிரவைசர், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், கிரேன் ஆபரேட்டர், ரிகர் போன்ற பணிகள் உள்ளன. மொத்தம் 737 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், பெட்ரோலியம் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை அறிவியல், கலை பட்டப் படிப்பு படித்தவர்கள், கணினி அறிவு, தட்டச்சுத்திறன் பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பிரிவில் பணித்திறன் பெற்றவர் களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.370 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை https://www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தெற்கு மண்டலம் தெற்கு மண்டல கிளையில் 86 பணியிடங்கள் உள்ளன. இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், 10-ம் வகுப்பு படிப்புக்குப்பின் குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிட விவரம், வயது வரம்பு, கல்வித்தகுதி விவரங்களை என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு வருகிற 20-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதுபோல திரிபுரா மாநிலம் அகர்தாலா ஓ.என்.ஜி.சி. கிளையில் நான்-எக்சிகியூட்டிவ் பணிக்கு 85 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு 19-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :INDIAN ARMY | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 191 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019.

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :INDIAN ARMY | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 191 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019. ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டதாரிகள் சேர்ப்பு ஆண்- பெண் இரு பாலரும் சேரலாம் ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப் படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின்படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 53-வது சேர்க்கையின்படி ஆண்களும், 24-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் அக்டோபர் 2019 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண் களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண் களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-10-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதவைகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் ஆண்-பெண் இருபாலரும் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். விதவைப் பெண்களுக்கு ஒன்றிரண்டு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யும் முறை எஸ்.எஸ்.பி. அமைப்பின் மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலை தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படங்களை புரிந்து கொள்ளுதல், நுண்ணறிவுத் திறன், உடல் திறன் தேர்வு, கலந்துரையாடல், நேர் காணல், உளவியல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் சேரலாம். மேலும் 18 நிலைகளில் பதவி உயர்வு பெறுவதுடன், 2½ லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வும் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-2-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

Popular Posts

Search This Blog

Labels

@ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
Back to TOP

Get Latest Updates: Follow Us On WhatsApp

Contact Form

Name

Email *

Message *

Labels

Blog Archive

Recent Posts

Pages

பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.