Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641 விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.

  • SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 641
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019.
  • இணைய முகவரி : www.sbi.co.in

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 641 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் இந்த வங்கியில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ‘ரிலேசன்ஷிப் மேனேஜர்’ பிரிவில் 486 இடங்கள் உள்பட 8 பிரிவுகளில் அதிகாரி பணிக்கு 579 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ‘ரிலேசன்ஷிப்’ அதிகாரி பணிக்கு 23 வயது முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களில் அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்பட பல பிரிவு பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் பணியிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் பணியிலும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கு சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது, ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 12-ந் தேதியாகும். 62 பணிகள் மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி தரத்திலான மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் பணிக்கு 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும். விருப்பமுள்ளவர்கள் இவை பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019.

  • LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019
  • இணைய முகவரி : www.licindia.in

எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பயிற்சிப் பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பயிற்சி பணிகளுக்கு 8 ஆயிரத்து 581 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இதில் டெவலப்மென்ட் ஆபீசர் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 581 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு மண்டலத்தில் 1257 இடங்கள், மத்திய மண்டலத்தில் 525 இடங்கள், கிழக்கு மண்டலத்தில் 922 இடங்கள், கிழக்கு மத்திய மண்டலத்தில் 701 இடங்கள், தெற்கு மத்திய மண்டலத்தில் 1251 இடங்கள், வடக்கு மண்டலத்தில் 1130 இடங்கள், வடக்கு மத்திய மண்டலத்தில் 1042 இடங்கள், மேற்கு மண்டலத்தில் 1753 இடங்கள் உள்ளன. இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் மே 1-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ், ஏதேனும் ஒரு கல்விப் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ம் மற்றவர்கள், ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜூன் 9-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஜூலை 6 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மை தேர்வு ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெறும். விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.licindia.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Share:

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பல்நோக்கு பணியாளர் உள்ளிட்ட பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.05.2019.

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பல்நோக்கு பணியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.05.2019. இணைய முகவரி : www.ssc.nic.in
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்களில் பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) காலிப் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தேர்வு முறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது ஆன்லைன்வழியில் நடைபெறும். முதல் தாள் அப்ஜெக்டிவ் வடிவில், இரண்டாவது தாள் விரிவாக விடையளிக்கும் வகையில் (Descriptive Paper) அமைந்திருக்கும். முதல் தாளில் பொது ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒன்றரை மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். 100 மதிப்பெண். இத்தேர்வு ஆகஸ்டு 2 முதல் செப்டம்பர் 6 வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்படும். இரண்டாம் தாளில் ஆங்கிலம் அல்லது தமிழ் உள்ளிட்ட 23 பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறு கட்டுரை அல்லது கடிதம் எழுத வேண்டும். தேர்வு நேரம் 30 நிமிடங்கள். முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நவம்பர் 17-ம் தேதி 2-ம் தாள் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெற்றால் போதும். முதல் தாள் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். தகுதியுடையவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (www.ssc.nic.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம், தேர்வுக்குரிய பாடத்திட்டம் போன்ற விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.வேலை வேண்டுமா?முக்கியத் தேதிகள் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 மே 2019 முதல் தாள் தேர்வு: 02/08/19 06/09/19 இரண்டாம் தாள் தேர்வு: 17/11/19
Share:

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 019 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019.

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 019 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019. இணைய முகவரி : https://www.sbi.co.in/careers
பிரபலமான வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ.வங்கியில் தற்போது ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அழைப்பின் மூலம் 19 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்று, குறிப்பிட்ட முன் அனுபவம் உடையவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, விரிவான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் போன்ற விவரங்களை, https://bank.sbi/careers மற்றும் https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களின் மூலம் அறிந்து கொண்டு, விண்ணப்பிக்கலாம்.
Share:

NIRT RECRUITMENT 2019 | NIRT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர், கன்சல்டன்ட், சீனியர் புராஜெக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 131 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.04.2019.

NIRT RECRUITMENT 2019 | NIRT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர், கன்சல்டன்ட், சீனியர் புராஜெக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 131 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.04.2019. இணைய முகவரி : www.nirt.res.in
நேஷனல் இன்ஸ்டிடிட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோசியஸ் நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் இயங்கி வருகிறது. தற்போது இதன் பல்வேறு மாநில கிளைகளில், பல்வேறு விதமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக டிரைவர், கன்சல்டன்ட், சீனியர் புராஜெக்ட் அசிஸ்டன்ட் என மொத்தம் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, மருத்துவர் படிப்புகளை முடித்தவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விரிவான விவரங்களுக்கு http://www.nirt.res.in என்ற இணையதளத்தை திறந்து, பணியிடங்களுக்கு ஏற்றப்படி விண்ணப்பிக்கலாம்.
Share:

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019.

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019. இணைய முகவரி : www.mhc.tn.gov.in
தமிழகத்தில் உயர்நீதிமன்றங்கள் (ஐகோர்ட்டு) சென்னை மற்றும் மதுரையில் செயல்படுகிறது. தற்போது சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் (வீட்டு உதவியாளர்) பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு, இந்த அழைப்பின் மூலம் 180 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தேர்வாளர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள். சமைத்தல், வீடு பராமரிப்பு போன்ற வேலைகள், தேர்வாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவர்கள் சென்னை நீதிமன்றத்திலோ அல்லது மதுரை உயர்நீதிமன்ற கிளையிலோ பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பொது பிரிவு விண்ணப்பதாரர்கள், 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். மற்ற பிரிவினருக்கு, வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகின்றன. பொது பிரிவினர், ஓ.பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் டி.டி.யாக இணைக்கப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-06-2019.

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-06-2019. இணைய முகவரி : www.joinindianarmy.nic.in

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-2000 மற்றும் 1-7-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 8-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Share:

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 062 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2019.

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 062 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2019. இணைய முகவரி : www.cdac.in
நவீன கணினி மேம்பாட்டு தொழில்நுட்ப மத்திய நிறு வனம் (C-DAC)) திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 50 வயதுடையவர்கள் திட்ட மேலாளர் பணிக்கும், 37 வயதுக்கு உட்பட்டவர்கள் திட்ட பொறியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ. படித்தவர்கள், எம்.டெக், எம்.இ., பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரத்தை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ந் தேதியாகும். மேலாளர் பணிக்கு நேர்காணலும், திட்ட பொறியாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலும் நடக்கிறது. ஜூன்1,2-ந் தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. விரிவான விவரங்களை www.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019.

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019. இணைய முகவரி : www.syndicatebank.in

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், பட்டப் படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 30 வயதுடையவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், 25 முதல் 35 வயதுடையவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் www.syndicatebank.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே 22-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கவும்.
Share:

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore
வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.
Share:

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 045 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 045 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. இணைய முகவரி : http://districts.ecourts.gov.in/tn/tirunelveli
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிகளுக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்காலிக பணியிடங்களான இதற்கு பட்டப்படிப்புடன், கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். 14-12-2018 மற்றும் 7-3-2019 அறிவிப்பின்படி விண்ணப்பம் அனுப்பாதவர்கள் மட்டும் இப்போது விண்ணப்பிக்கலாம். வி்ண்ணப்பங்கள் வருகிற 17-ந் தேதிக்குள் மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

ICSI RECRUITMENT 2019 | ICSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 052 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.05.2019.

ICSI RECRUITMENT 2019 | ICSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 052 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.05.2019. இணைய முகவரி : www.icsi.edu
மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று, ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டேரியஸ் ஆப் இந்தியா’ ( (ICSI). தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களான அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. அதிகாரி பணிக்கு மட்டும் 55 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்புடன், ஐ.சி.எஸ்.ஐ. உறுப்பினர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.icsi.edu என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு மே 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Share:

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் (கிரேடு-ஏ) உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 079 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-5-2019.

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் (கிரேடு-ஏ) உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 079 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-5-2019. இணைய முகவரி : www.nabard.org
நபார்டு வங்கியில் அதிகாரி பணி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு (NABARD) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பல்வேறு பிரிவுகளில் அதிகாரி பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-5-2019-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்து, முதுநிலை படிப்பு படித்தவர்கள், முதுநிலை மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு அல்லது எம்.பி.ஏ., பிஎச்.டி. படித்தவர்கள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு கட்டணமாக ரூ.150 மட்டும் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இணையதளம் வழியாக கட்டணம் மற்றும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 26-5-2019-ந் தேதியாகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15,16-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட தேர்வு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN COASTGUARD RECRUITMENT 2019 | INDIAN COASTGUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சமையல்காரர் மற்றும் ஸ்டூவர்டு உள்ளிட்ட பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-6-2019.

INDIAN COASTGUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சமையல்காரர் மற்றும் ஸ்டூவர்டு உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-6-2019. இணைய முகவரி : www.joinindiancoastguard.gov.in
கடலோர காவல் படையில் பயிற்சியுடன் கூடிய ‘யந்த்ரிக்’ பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய கடலோர காவல் படை, ‘யந்திரிக்/2-2019 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். சமையல்காரர் மற்றும் ஸ்டூவர்டு பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-10-1997 மற்றும் 3-9-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு 5-6-2019 அன்று தொடங்குகிறது. 10-6-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். விரிவான விவரங்களை www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NITI RECRUITMENT 2019 | NITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இளம் வல்லுனர் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 060 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019.

NITI RECRUITMENT 2019 | NITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இளம் வல்லுனர் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 060 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019. இணைய முகவரி : www.niti.gov.in
நிதி ஆயோக் அமைப்பு, தேசிய வளர்ச்சித் திட்டங்களை பரிந்துரைப்பது, மாநிலங்களின் வளர்ச்சித் தி்ட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறது. பிரதமரின் தலைமையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பில் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளம் வல்லுனர் பணிக்கு 60 பேரும், இன்னோவேசன் லீடு பணிக்கு 12 பேரும், மானிட்டரிங் லீடு பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சில பிரிவுகளில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக் படித்தவர்கள், மேனேஜ்மென்ட் முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம், எம்.பி.பி.எஸ்., மற்றும் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சட்டம் படித்தவர்களுக்கு இளம் வல்லுனர் பணியில் வாய்ப்பு கள் உள்ளன. முதுநிலை படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். படித்தவர்கள் மானிட்டரிங் லீடு மற்றும் இன்னோவேசன் லீடு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.niti.gov.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN COASTGUARD RECRUITMENT 2019 | INDIAN COASTGUARDஅறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி கமாண்டன்ட் பணி உள்ளிட்ட பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-6-2019.

INDIAN COASTGUARD RECRUITMENT 2019 | INDIAN COASTGUARDஅறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி கமாண்டன்ட் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-6-2019. இணைய முகவரி : http://joinindiancoastguard.gov.in/
இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப்படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி பணியான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. ஜெனரல் டியூட்டி, கமர்சியல் பைலட் லைசென்ஸ், டெக்னிக்கல் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ‘அசிஸ்டன்ட் கமாண்டன்ட் 1-2020’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-1995 மற்றும் 30-6-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1995 மற்றும் 30-6-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 24-5-2019-ந் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. 4-6-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

CANARA RECRUITMENT 2019 | CANARA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.05.2019.

CANARA RECRUITMENT 2019 | CANARA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.05.2019. இணைய முகவரி : www.canfinhomes.com
பிரபல வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. கேன் பின் ஹோம்ஸ் என்பது இந்த வங்கி யின் துணை நிதி நிறுவனமாகும். வீட்டுக்கடன் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது மேலாளர், ஜூனியர் ஆபீசர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... ஒரு அறிவிப்பின்படி ஒப்பந்த அடைப்படை யில் சீனியர் மேனேஜர் பணிக்கு 10 பேரும், ஜூனியர் ஆபீசர் பணிக்கு 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை மேலாளர் பணிக்கு 62 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் ஆபீசர் பணிக்கு 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-6-2019-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். பட்டப்படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்கள் ஜூனியர் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு வங்கிப் பணிகளில் போதிய அனுபவம் உள்ளவர்கள் முதுநிலை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.5-2019-ந் தேதியாகும். மற்றொரு அறிவிப்பின்படி மேலாளர் பணிக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 1-6-2019-ந் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.100 கட்டணம் செலுத்தி, மே 18-ந் தேதிக்குள் வி்ண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.canfinhomes.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-5-2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-5-2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் பணிக்கு 13 இடங்களையும், ரிசர்ச் அசிஸ்டன்ட் பணிக்கு 26 இடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு திறன் பெற்றவர்கள் அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு 20-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோடெக்னாலஜி உள்ளிட்ட முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் ரிசர்ச் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே 29-ந் தேதி கடைசிநாளாகும். இவை பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

BOAT RECRUITMENT 2019 | BOAT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-05-2019.

BOAT RECRUITMENT 2019 | BOAT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-05-2019. இணைய முகவரி : www.boat-srp.com

பயிற்சிப் பணி முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான அப்ரண்டிசிப் டிரெயினிங் வாரியத்தின், தெற்கு மண்டலத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிப்பணிகளுக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் 40 பேரும், டிப்ளமோ என்ஜினீயர்கள் 50 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய முழுமையான விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 8-5-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/ என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.
Share:

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019.

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019. இணைய முகவரி : www.tcil-india.com
டெலி கம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணி களுக்கு 56 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். 30 முதல் 50 வயதுடையவர் களுக்கு பணிகள் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், சி.ஏ., சி.எம்.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை www.tcil-india.com இணையதளத்தில் பார்த்துவிட்டு, 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி, மே 14-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
Share:

NIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.

NIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. இணைய முகவரி : www.nios.ac.in
திறந்தவெளி தேசிய கல்வி மையம் (NIOS), இயக்குனர், கல்வி அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 52 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. முதுநிலை இந்தி, ஆங்கிலம் மொழி படிப்புகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஹார்டுவேர் என்ஜினீயரிங் முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள், 12-ம்வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 17-ந் தேதி வி்ண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரத்தை www.nios.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

GSI RECRUITMENT 2019 | GSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 37 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-6-2019.

GSI RECRUITMENT 2019 | GSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 37 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-6-2019. இணைய முகவரி : www.gsi.gov.in
மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் ஜியாலஜிகல் சர்வே அமைப்பில் தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 26-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை இணையதளங்களில் பார்க்கலாம்.
Share:

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 027 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019.

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 027 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019. இணைய முகவரி : www.careers.bhel.in
பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் மற்றும் சூப்பிரவைசர் பணிக்கு 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்ஜினீயர் பணிக்கும், டிப்ளமோ படித்தவர்கள் சூப்பிரவைசர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 14-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான நேர்காணல் வருகிற 29-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை careers.bhel.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 168 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-5-2019.

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 168 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-5-2019. இணைய முகவரி : www.bmrc.co.in
பெங்களூரு மெட்ரோ ரெயில்வே நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், சீப் என்ஜினீயர், கிராஜூவேட் என்ஜினீயர், ஜெனரல் மேனேஜர், மேனேஜர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது. மொத்தம் 168 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே அறிவிப்பும், விண்ணப்ப காலமும் வழங்கப்பட்டிருந்தன. தற்போது இவற்றுக்கான விண்ணப்ப அவகாச காலம் நீடிப்பு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று (6-5-2019) மாலை வரை இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019.

ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019. இணைய முகவரி : www.recruitment.itbpolice.nic.in

இந்திய திபெத்திய எல்லை காவல் படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய திபெத்திய எல்லைக் காவல்படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. (ITBP) என அழைக்கப் படுகிறது. துணை ராணுவ படையான இதில் தற்போது விளையாட்டு ஒதுக்கீடு 2019 அடிப் படையில் கான்ஸ்டபிள் (பொது) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப்-சி பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்களாகும். மொத்தம் 121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 21-6-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தட களம், நீர் விளையாட்டுகள், குத்துச்சண்டை, வுசு, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், வில்வித்தை, பனிச்சறுக்கு, கராத்தே போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 1-1-2017 முதல் 21-6-2019 வரை இடைப்பட்ட காலத்தில் விளையாட்டில் சாதித்தவர்களே விண்ணப்பிக்க முடியும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

முக்கிய தேதிகள்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Share:

HAL RECRUITMENT 2019 | HAL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2019.

HAL RECRUITMENT 2019 | HAL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2019. இணைய முகவரி : www.hal-india.co.in
எச்.ஏ.எல். விமான நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு 826 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு... இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) எனப்படும் விமான நிறுவனம், ராணுவத்திற்குத் தேவையான பல்வேறு உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களை அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 561 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 25 இடங்களும், என்ஜினீயரிங் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 240 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஐ.டி.ஐ. படித்தவர்கள், ஐ.டி.ஐ. பிரிவு பணிக்கும், பிளஸ்-2 அறிவியல் பாடங்களை படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பணிகளுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் பட்டதாரிகள்-டிப்ளமோ பிரிவு பயிற்சிப் பணிக்கும் வி்ண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ARMY RECRUITMENT 2019 | ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : செய்லர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.05.2019.

ARMY RECRUITMENT 2019 | ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : செய்லர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.05.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படை இசைக்குழுவில் பணி.இந்திய கடற்படையில் இசைக்குழு பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி களின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.தற்போது செய்லர் (மியூசிசியன்) 2-2019 என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களை இசைக்குழு பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமண மாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-1994 மற்றும் 30-9-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மெட்ரிக் கல்வி (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இசை அனுபவம் தேவை.

தேர்வு செய்யும் முறை:

சான்றிதழ் சரிபார்த்தல், இசைத்திறன் சோதித்தல், உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 15 வார கால அடிப்படை பயிற்சியும், 26 வார காலம் ராணுவ இசை பயிற்சியும் வழங்கப்படும். இவர்கள் 15 ஆண்டு காலம் பணிவாய்ப்பு பெறலாம். பின்னர் தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பணி வாய்ப்பு நீடிக்கப்படும்.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : மே 19-ந் தேதி

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.joinindiannavy.gov.in


Share:

FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 274 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019

FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 274 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019. இணைய முகவரி : www.fact.co.in

உரம் மற்றும் வேதிப் பொருட்கள் நிறுவனத்தில் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

திருவாங்கூர் உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் நிறுவனம் சுருக்கமாக பேக்ட் (FACT) என்று அழைக்கப்படுகிறது. மத்திய நிறுவனமான இதில் தற்போது உதவி பொது மேலாளர், சீனியர் மேலாளர், உதவி கம்பெனி செகரட்ரி, மருத்துவ அதிகாரி, டெபுட்டி மேனேஜர், உதவி மேனேஜர், ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.மொத்தம் 274 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு 51 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் உள்ளன. கிராப்ட்ஸ்மேன் பணிக்கு 27 இடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணி வாரியான விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 48 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணி உள்ளது. 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. 1-4-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, எம்.பி.பி.எஸ், சி.ஏ., சி.எம்.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ. போன்ற படிப்புகளுடன் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. பி.எஸ்சி. (அக்ரி), டிப்ளமோ என்ஜினீயரிங், இதர பட்டப்படிப்புகள் படித்தவர் களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் கீழ்நிலை அலுவலக பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் அதிகாரி தரத்திலான பணிக்கு ரூ.1000-ம், மற்ற பணிகளுக்கு ரூ.500 கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை http://www.fact.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

Popular Posts

Search This Blog

Labels

@ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
Back to TOP

Get Latest Updates: Follow Us On WhatsApp

Contact Form

Name

Email *

Message *

Labels

Blog Archive

Recent Posts

Pages

பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.