Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

NAVY RECRUITMENT 2019 | NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மாலுமி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 400 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 1-8-2019.

  • NAVY RECRUITMENT 2019 | NAVY  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : மாலுமி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 400 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 1-8-2019.
  • இணைய முகவரி : https://www.joinindiannavy.gov.in/
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது மாலுமி (செய்லர் ஏப்ரல் 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 400 இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் 1-4-2000 மற்றும் 31-3-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மெட்ரிக் கல்வி (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 1-8-2019-ந் தேதி. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in/
Share:

AIESL RECRUITMENT 2019 | AIESL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பைலட் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 125 . நேர்காணல் நாள் : ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை

  • AIESL RECRUITMENT 2019 | AIESL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பைலட்   உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 125 .
  • நேர்காணல் நாள் : ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை
  • இணைய முகவரி : www.airindia.in
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயர்கள் மற்றும் பைலட் லைசென்சு பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக ஏ.ஐ.இ.எஸ்.எல். (AIESL) என அழைக்கப்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி யுடன், குறிப்பிட்ட ரக விமானங்களை இயக்குவதற்கான  டி.ஜி.சி.ஏ. லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 53 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 56 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 58 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடை பெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். புதுடெல்லியில் நேர்காணல் நடக்கிறது.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.1000 கட்டண டி.டி.யுடன், விண்ணப்ப படிவத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். தேவையான சான்றுகளை உடன் கொண்டு சென்று நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Share:

CICT RECRUITMENT 2019 | CICT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PROFESSOR, READER, LECTURER உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13 . விளம்பர அறிவிப்பு நாள் : 17.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.

  • CICT RECRUITMENT 2019 | CICT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : PROFESSOR, READER, LECTURER உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 17.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.
  • இணைய முகவரி : www.cict.in


Share:

TNPL RECRUITMENT 2019 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : MANAGEMENT TRAINEE . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8 . விளம்பர அறிவிப்பு நாள் : 18.07.2019 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.08.2019 .

  • TNPL RECRUITMENT 2019 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : MANAGEMENT TRAINEE .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 18.07.2019 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.08.2019 .
  • இணைய முகவரி : http://www.tnpl.com

Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ASST TOURIST OFFICER GRADE II உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 42 . விளம்பர அறிவிப்பு நாள் : 16.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ASST TOURIST OFFICER GRADE II உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 42 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 16.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.09.2019 .
  • இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html
Share:

இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட அஞ்சல் ஊழியர் நியமன தேர்வு ரத்து தமிழிலும் எழுத மத்திய அரசு அனுமதி

இந்தி, ஆங்கில மொழிகளில் நடத் தப்பட்ட அஞ்சல் துறை பணி களுக்கான தேர்வு ரத்து செய்யப் படும் என்றும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்திய அஞ்சல் துறையின் கீழ் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அஞ்சலர், மெயில்கார்டு, உதவி யாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப் பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி என 3 மொழிகளில் அமைந்திருக்கும். கடந்த 2015-ம் ஆண்டில் அஞ்சல் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடந்தது. இதில் ஹரியாணா, பிஹார் உள் ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண் களை பெற்றது சர்ச்சையை ஏற் படுத்தியது. அதன் பின் கடந்த 4 ஆண்டுகளாக அஞ்சல் துறை தேர்வு நடத்தப்பட வில்லை. இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை சார்பில் ஊரக பகுதிகளுக் கான அஞ்சலர், உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தமிழகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்தில் 989 பேர் எழுதினர். இதில் வழக் கத்துக்கு மாறாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழில் வழங்கப்படவில்லை. தேர்வு நடைபெறுவதற்கு ஓரிரு தினங்கள் முன்பு இந்தி, ஆங்கிலத் தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என திடீரென அறிவிப்பு வெளி யானதே இதற்குக் காரணம். இதனால் அதிர்ச்சி அடைந்த விண் ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட தடைவிதித்தது. அஞ்சல் தேர்வு விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எழுப்பப்பட்டது. ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளிடையே நீண்ட நேரம் விவா தம் நடைபெற்றது. அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் நடத்த வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில், மாநிலங்களவை யில் நேற்று முன்தினம் பூஜ்ஜிய நேரத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இந்தப் பிரச் சினையை எழுப்பினர். தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் வினாத் தாளுடன் மீண்டும் தேர்வு நடத்தப் பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “உறுப்பினர்கள் எழுப்பி உள்ள பிரச்சினை மிகவும் முக்கியமானது. இதுகுறித்து சம் பந்தப்பட்ட அமைச்சரிடம் ஏற் கெனவே பேசி உள்ளேன். அவ ருடன் பேசுங்கள்” என்றார். மாநிலங்களவையில் 2-வது நாளாக நேற்றும் அதிமுக உறுப் பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். திமுக, இந்திய கம் யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இணைந்து கொண்டு அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக 4 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதுகுறித்து பேசும்போது, “தமிழ கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அவையில் ஒரு பிரச்சினையை எழுப்பினர். இதுகுறித்து நான் உடனடியாக ஆய்வு செய்தேன். இதன் அடிப்படையில், கடந்த 14-ம் தேதி நடந்த அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி வினாத் தாளுடன் மீண்டும் தேர்வு நடத்தப்படும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழி களையும் மதிக்கிறது என் பதை இந்த அவைக்கும் நாட்டுக்கும் உறுதி அளிக்க விரும்புகிறேன். தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது, தமிழ் மொழியின் சிறப்பை நன்கு உணர்ந்துள்ளேன்” என்றார். இதையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் திருப்தி அடைந் தனர். மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் மத்திய அமைச் சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மைத்ரேயன் எம்.பி. கூறிய போது, "அஞ்சல் துறைத் தேர்வு விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பிய அனைத்து எம்.பி.க்களுக் கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்வு விவகாரத்தால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. அதனால்தான் குரலை உயர்த்தி எழுப்பினோம்" என்று தெரிவித்தார். மார்க்சிஸ்ட் எம்பி டி.கே. ரங்கராஜன் கூறியபோது, "மத்திய அரசின் அனைத்து துறைகளும் பிராந்திய மொழிகளில் போட்டித் தேர்வை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசியபோது, "இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியின்படி மத்திய அரசின் அனைத்து துறைகளின் தேர்வு, பாதுகாப்புப் படைகளுக்கான தேர்வுகள் மும்மொழிக் கொள் கையின் அடிப்படையில் நடத் தப்பட வேண்டும்" என்று தெரி வித்தார். - பிடிஐ
Share:

மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17 மற்றும் 18-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் தகுதிவாய்ந்த மின்கம்பி உதவியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்கவேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இந்த தேர்வுக்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து ரூ.10 ரொக்கமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனுப்புவதற்கு வருகிற 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share:

வேலை - கால அட்டவணை - 15.07.2019


Share:

கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக் போன்ற பணி

கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக் போன்ற பணிகளுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐடிஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 22 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 7-ந்தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.barc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணி

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் புதுடெல்லியில் உள்ள, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முதுநிலை நிர்வாக அதிகாரி அலுவலகத்தை சென்றடைய வேண்டும். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு ஜூலை 5-ந்தேதி வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை www.cpcb.nic.in என்ற இணையதளத் தில் பார்க்கலாம்
Share:

மத்திய அரசு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், சீனியர் டெக்னிக்கல் மேனேஜர், மேலாளர் உள்ளிட்ட பணி

சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும், மத்திய அரசு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், சீனியர் டெக்னிக்கல் மேனேஜர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசிநாள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 22-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.celindia.co.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

மீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டப்படிப்பு என பலதரப்பட்ட படிப்பினை படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 5-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://tnjfu.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
Share:

கிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சுருக்கமாக கே.வி.ஐ.சி. எனப்படுகிறது. உதவி டைரக்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சி.ஏ., பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் மற்றும் இதர பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்கள் உள்ளன. பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்சி கியூட்டிவ், அசிஸ்டன்ட் போன்ற அலுவலக பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். www.kvic.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜூலை 31-ந் தேதியாகும்.
Share:

உருக்கு ஆணையத்தில் மருத்துவ பணியிடங்கள்

உருக்கு ஆணைய நிறுவனத்தில் மருத்து அதிகாரி மற்றும் துணை மருத்துவ பணியிடங்களுக்கு 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (Sail) என்று அழைக்கப்படுகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் உருக்கு ஆலை நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி மற்றும் துணை மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக நர்சிங் சிஸ்ட்டர் பணிக்கு 234 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 81 இடங்களும் உள்ளன. இவை தவிர டயட்டீசியன், போட்டோகிராபர், டிரெஸ்ஸர், லாண்டரி ஆபரேட்டர், அட்டன்ட், ஜூனியர் மேனேஜர், மெடிக்கல் ஆபீசர், ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பெரும்பாலான பணியிடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரி பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு இவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-8-2019-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் 2684 பணியிடங்கள்

மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் 2 ஆயிரத்து 684 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மினி ரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்., டி.வி. ரேடியோ ஒளிபரப்பு- ஒலிபரப்பு தொடர்பான பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான இதில் தற்போது திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 684 பேர், தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும்.

இதில் ஸ்கில்டு மேன்பவர் பிரிவில் 1336 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். திறன் சாராத பணிப்பிரிவுகளில் 1342 இடங்கள் உள்ளன. கன்சல்டன்ட் (எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்) பணிக்கு 4 பேரும், அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பிரிவில் 2 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

எலக்ட்ரிக்கல் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் அல்லது டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கும், பி.டெக் எலக்ட்ரிக்கல் படித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. (நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 25-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.becil.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Share:

என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 47-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-6-1995 மற்றும் 1-6-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 8-8-2019-ந் தேதியாகும்.

மேலும் இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NVS RECRUITMENT 2019 | நவோதயா வித்யாலயா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2365 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019. தேர்வு நடைபெற உள்ள நாள் : 05.09.2019 முதல் 10.09.2019 .

  • NVS RECRUITMENT 2019  | நவோதயா வித்யாலயா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2365 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 05.09.2019 முதல் 10.09.2019  .
  • இணைய முகவரி : www.navodaya.gov.in

மத்திய அரசின் மனிதவளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 2365 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Commissioner (Group-A) காலியிடங்கள்: 05 வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.78800-209200 பணி: Post Graduate Teachers (PGTs) (Group-B) காலியிடங்கள்: 430 சம்பளம்: மாதம் ரூ.47600-151100 வயதுவரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-B) காலியிடங்கள்: 1154 சம்பளம்: மாதம் ரூ.44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி: Miscellaneous Category of Teachers (Group-B) காலியிடங்கள்: 564 சம்பளம்: மாதம் ரூ. 44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி: Female Staff Nurse (Group B) காலியிடங்கள்: 55 சம்பளம்: மாதம் ரூ.44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 பணி: Legal Assistant (Group C) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.35400-112400 வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Catering Assistant (Group C) காலியிடங்கள்: 26 சம்பளம்: மாதம் ரூ.25500-81100 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். Lower Division Clerk (Group C) காலியிடங்கள்: 135 சம்பளம்: 19900-63200 வயதுவமர்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 முதல் 10.09.2019 விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019 முதல் 09.08.2019
Share:

TN FORESTS RECRUITMENT 2019 | TN FORESTS DEPT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வனக்காவலர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 . விண்ணப்பம் துவக்கம் : 20.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.

  • TN FORESTS RECRUITMENT 2019 | TN FORESTS DEPT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : வனக்காவலர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 .
  • விண்ணப்பம் துவக்கம்  : 20.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.
  • இணைய முகவரி : https://www.forests.tn.gov.in

வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் (விளம்பர எண்.1/2019, நாள்: 07-03-2019-அறிவிக்கை எண்-1 இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் விளம்பரம் எண்.1/2019, நாள்: 07/03/2019 (அறிவிக்கை எண்-1ன்படி வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்களை வரவேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறுவது குறித்தான முக்கியமான நாட்கள் தோராயமானது) பற்றிய விபரங்களும் 07/03/2019. மற்றும் 02/07/2019 தேதியிட்ட அறிவிக்கைகளின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வனக்காவலர் (564) பதவிகளுக்குரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு 20/07/2019 அன்று துவங்கி 10/08/2019 வரை நடைபெற உள்ளது.

Share:

தலைமை அஞ்சலகத்தில் முகவர்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு!

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக, முதன் மை அ தி காரி வி. கனகரா ஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அஞ்சலக ஆயுள் காப் பீட்டு திட்டங்களை விற் பனை செய்வதற்கான பட்டி யலிடுதல்குழு உறுப்பினர்கள் மற்றும் நேரடி முகவர்களை தேர்வு செய்வதற்காக, நேர்முகத்தேர்வுசென்னை அண்ணா சாலை தலைமை அ ஞ் சல கத்தி ல் வரும் 17.07.2017 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இ தி ல் ப ங் கேற் க விருப்பமுள்ளவர்கள் பின்வ ரும்தகுதிகளைக்கொண்டவர் களாக இருக்க வேண்டும்.
1. 5000த்திற்கும் குறை வான மக்கள் தொகையைக் கொண்டபகுதியில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை யைக் கொண்ட பகுதியில் வாழும் விண்ணப்பதா ரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
2. வயது:18முதல் 60வரை
3. வகைகள்: எந்த ஒருகாப் பீட்டு நிறுவனத்திலும் தற் போது முகவர்கள் / ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்களாக பணியாற்றுபவர்கள், இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதியில்லை
4. விரும்பத்தக்கது: காப் பீட்டுத் திட்டங்களை விற்ப தில் அனுபவம் மிக்கவர்கள், கணினி அறிவு பெற்றவர்கள், பணியாற்றும் பகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதி பற்றிய குறிப் புகள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது /கல் வித்தகுதி/தேவையானசான் றிதழ்கள் மற்றும் அனுபவ தகவல்களுடன் நேரில் வரலாம். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
Share:

வேலை - கால அட்டவணை


Share:

PRASARBHARATI RECRUITMENT 2019 | பிரசார் பாரதி நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆங்கர் கம் கரஸ்பாண்டன்ட் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 89 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.

  • PRASARBHARATI RECRUITMENT 2019 | பிரசார் பாரதி நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஆங்கர் கம் கரஸ்பாண்டன்ட் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 89 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.
  • இணைய முகவரி : www.prasarbharati.gov.in, www.ddnews.gov.in

இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான, பிரசார் பாரதி நிறுவனம், தற்போது தூர்தர்சன் செய்திச் சானலுக்கு குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ‘ஆங்கர் கம் கரஸ்பாண்டன்ட்’, காப்பிரைட்டர், அசைன்மென்ட் கோஆர்டினேட்டர், கெஸ்ட் கோஆர்டினேட்டர், கேமரா பெர்சன், பிராட்காஸ்ட் எக்சிகியூட்டிவ் போன்ற பணியிடங் களுக்கு மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ரேடியோ/ டி.வி. புரொடக்சன் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் புராட்காஸ்ட் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சினிமட்டோகிராபி, வீடியோகிராபி, பப்ளிக் ரிலேசன், ஜர்னலிசம் பட்டப்படிப்புகள், மாஸ் கம்யூனிகேசன் முதுநிலை டிப்ளேமா படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். Deputy Director (Hr), oom No.413, 4th Floor. DD News, Doordharshan Bhawan, Tower-b, Copernicus Marg. New Delhi 110001 என்ற முகவரிக்கு ஜூலை 12-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.prasarbharati.gov.in,www.ddnews.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் பார்க்கலாம்.
Share:

NPCIL RECRUITMENT 2019 | NPCIL கல்பாக்கம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெக்னீசியன்-பி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.07.2019.

  • NPCIL RECRUITMENT 2019 | NPCIL கல்பாக்கம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டெக்னீசியன்-பி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.07.2019.
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com

இந்திய அணுசக்தி கழக நிறுவனமான என்.பி.சி.ஐ.எல்., கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் ‘டெக்னீசியன்-பி’ (ஸ்டைபென்டியரி டிரெயினி) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 68 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 அறிவியல் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 11-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Share:

BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பேஷன்ட் கேர் மேனேஜர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 90 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.

  • BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பேஷன்ட் கேர் மேனேஜர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 90 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.
  • இணைய முகவரி : www.becil.com .

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம் புராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் பேஷன்ட் கேர் மேனேஜர், பேஷன்ட் கேர் கோஆர்டினேட்டர் போன்ற பணிகளுக்கு 90 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பேஷன்ட் கேர் கோஆர்டினேட்டர் பணிக்கு மட்டும் 70 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. லைப் சயின்ஸ் படித்தவர்கள் பேஷன்ட் கேர் கோஆர்டினேட்டர் மற்றும் மேலாளர் பணிகளுக்கு வரவேற்கப்படுகிறார்கள். இதர பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். கோஆர்டினேட்டர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும், மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். Assistant General Manager (HR), BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P) என்ற முகவரிக்கு வருகிற 12-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி, ‘பேஷன்ட் கேர் மேனேஜர் மற்றும் கோஆர்டினேட்டர்’ பணி களுக்கு லைப் சயின்ஸ், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தலா 20 பணியிடங்கள் வீதம், மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கும் வருகிற 12-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.becil.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 200 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2019.

  • AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 200 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2019.
  • இணைய முகவரி : www.aiimsraipur.edu.in

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை மருத்துவமனைகள், கல்லூரிகள் செயல்படுகின்றன. தற்போது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் நர்சிங் அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இது கிரேடு-2 தரத்திலான ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களாகும். மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 90 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 9 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. (ஹான்ஸ்) நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஜெனரல் நர்சிங் மிட்வை பரி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தங்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 21-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsraipur.edu.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Share:

MKU RECRUITMENT 2019 | MADURAI KAMARAJ UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கௌரவ விரிவுரையாளர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92 . நேர்காணல் நாள் : 16-7-2019-ந் தேதி முதல் 18-7-2019 வரை.

  • MKU RECRUITMENT 2019 | MADURAI KAMARAJ UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கௌரவ விரிவுரையாளர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92 .
  • நேர்காணல் நாள் : 16-7-2019-ந் தேதி முதல் 18-7-2019 வரை.
  • இணைய முகவரி : www.mkuniversity.ac.in

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளர் (Guest fculty) பணிக்கு 92 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாகும். தமிழ், இயற்பியல், ஆங்கிலம், கணிதம், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், பி.பி.ஏ., எம்.பி.ஏ., டூரிஸம் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட், பிசிகல் எஜூகேசன் போன்ற பாடப்பிரிவில் பணிகள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை படிப்புடன், நெட், செட் தேர்வு எழுதியவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். 16-7-2019-ந் தேதி முதல் 18-7-2019 வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது. எந்த பாடங்களுக்கு எந்த நாளில், எந்த நேரத்தில் நேர்காணலில் ஆஜராக வேண்டும் என்பதை அறிந்து கொண்டு நேரில் செல்லவும். விரிவான விவரங்களை www.mkuniversity.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 42 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.

  • NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 42 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.
  • இணைய முகவரி : www.nith.ac.in

இமாசல பிரதேச மாநிலம் ஹாமிர்பூரில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புடன், பி.எச்.டி. நிறைவு செய்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.nith.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, வருகிற 12-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Share:

NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 44+6 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.

  • NIT RECRUITMENT 2019 | NIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 44+6 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.
  • இணைய முகவரி : http://www.nitj.ac.in

ஜலந்தர் என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 44 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி 6 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புகளுடன் பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.nitj.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், சூப்பிரண்டன்ட் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 137 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-7-2019.

  • NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், சூப்பிரண்டன்ட் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 137 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-7-2019.
  • இணைய முகவரி : https://recruit.nitk.ac.in/

கர்நாடக என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், சூப்பிரண்டன்ட், சீனியர் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு மொத்தம் 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ., பி.இ., பி.டெக். மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் https://recruit.nitk.ac.in/ என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 17-7-2019-ந் தேதியாகும்.
Share:

IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்/ ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019. தேர்வு நடைபெற உள்ள நாள் : 4-8-2019 .

  • IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்/ ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 4-8-2019 .
  • இணைய முகவரி : www.iocl.com

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (IOCL) என அழைக்கப்படுகிறது. தற்போது ஹால்தியாவில் உள்ள இதன் கிளை சுத்திகரிப்பு நிலையத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்/ ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரொடக்சன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேசன், பயர் அண்ட் சேப்டி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30-6-2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள். பி.எஸ்சி. (இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கணிதவியல்) பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், பயர்சேப்டி படித்து, கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜூலை 23-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 4-8-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Share:

PIONEER KUMARASWAMY COLLEGE RECRUITMENT 2019 | PIONEER KUMARASWAMY COLLEGE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ASST PROFESSOR உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 5 . விளம்பர அறிவிப்பு நாள் : 03.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.08.2019.

  • PIONEER KUMARASWAMY COLLEGE RECRUITMENT 2019 | PIONEER KUMARASWAMY COLLEGE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ASST PROFESSOR உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 5 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 03.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.08.2019.
Share:

MHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 . விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.

  • MHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.
  • இணைய முகவரி : www.mhc.tn.gov.in


சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவியாளர், தட்டச்சர் உட்பட 573 பணியிடங்களுக்கு தேர்வு 6 31-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற பணி யின்கீழ் 76கம்ப்யூட்டர் ஆபரேட்டர், 229 தட்டச்சர், 119 உதவியாளர், 142 ரீடர் மற்றும் எக்ஸாமினர், 7 ஜெராக்ஸ் ஆபரேட்டர் உட்பட 573 காலிப் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றம்பிசிஏ பட்டதாரிகள் அல்லது கம்ப்யூட்டரில் டிப்ளமோ முடித்த பி.ஏ, பி.எஸ்சி பட்டதாரி கள் விண்ணப்பிக்கலாம். அதோடு தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச் சில் ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பணிக்குஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் ஹையர் கிரேடு தேர்ச்சி அவசியம். உதவி யாளர், ரீடர் மற்றும் எக்ஸாமினர். ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிலின ருக்கு 30. இட ஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப் படையில் தேர்வு செய்யப்படுவர். தகுதியுள்ள பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் (www.rrint tngov.in) ஜூலை 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share:

Popular Posts

Search This Blog

Labels

@ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
Back to TOP

Get Latest Updates: Follow Us On WhatsApp

Contact Form

Name

Email *

Message *

Labels

Blog Archive

Recent Posts

Pages

பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.