Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

IDBI RECRUITMENT 2019 | IDBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-7-2019. தேர்வு நடைபெற உள்ள நாள் : 21-7-2019 .

  • IDBI RECRUITMENT 2019 | IDBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-7-2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 21-7-2019 .
  • இணைய முகவரி : www.idbibank.in

பிரபல வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. (IDBI) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மணிப்பால் வங்கிப் பணிகள் கல்லூரியில் பயிற்சி படிப்பில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். அத்துடன் பயிற்சி நிறைவில் அவர்கள் வங்கி நிதிப் பணிகளுக்கான டிப்ளமோ படிப்பு படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
பயிற்சியுடன் கூடிய இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-6-2019-ந் தேதியில் 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.700 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3-7-2019-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 21-7-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.idbibank.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Share:

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 196 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.07.2019.

  • AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 196 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.07.2019.
  • இணைய முகவரி : www.aiimspatna.org 

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாட்னாவில் செயல்படும் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 196 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 46 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 56 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 56 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 38 இடங்களும் உள்ளன. உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500-ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1200 கட்டணம் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 10-7-2019-ந் தேதியாகும். மற்றொரு அறிவிப்பின்படி பாட்னா எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிகளுக்கு 62 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனட்டாமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பார்மகாலஜி, மைக்ரோபயாலஜி போன்ற முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு ஜூலை 14-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இன்னொரு அறிவிப்பின்படி கற்பித்தல் சாராத ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட் பணிக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு ஜூலை 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி கற்பித்தல் சாராத பணியிடங்களான ‘ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க்’ பணிக்கு 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தி ஜூலை 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விவரங்களை www.aiimspatna.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2019 | BHARATHIDASAN UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : DIRECTOR. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 . விளம்பர அறிவிப்பு நாள் : 26.06.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.07.2019. இணைய முகவரி : www.bdu.ac.in

  • BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2019 | BHARATHIDASAN UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
  • பதவி : DIRECTOR .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 26.06.2019 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.07.2019 .
  • இணைய முகவரி : www.bdu.ac.in .

Share:

TASMAC RECRUITMENT 2019 | TASMAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : LAW OFFICER உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 . சம்பளம் : Rs 70,000 விளம்பர அறிவிப்பு நாள் : 30.06.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019.

  • TASMAC RECRUITMENT 2019 | TASMAC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : LAW OFFICER உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
  • சம்பளம் : Rs 70,000
  • விளம்பர அறிவிப்பு நாள் : 30.06.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019.
  • இணைய முகவரி : www.tasmac.co.in

Share:

INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மாலுமி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 . விளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.

  • INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : மாலுமி பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.
  • இணைய முகவரி : https://www.joinindiannavy.gov.in

கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 2700 பேர் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - பிப்ரவரி 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செய்லர் (ஏ.ஏ. - பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரையும் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 700 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்களை இந்த பயிற்சியில் சேர்த்து மாலுமியாக பயிற்சியளித்து பணியமர்த்திக் கொள்கிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் இனி பார்ப்போம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-2-2000 மற்றும் 31-1-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:
மேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்த பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

உடல் தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 28-6-2019-ந் தேதி
விண்ணப்பிக்க கடைசிநாள் : 10-7-2019

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in
Share:

TEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

  • TEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com

Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Junior Scientific Officer உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 . விளம்பர அறிவிப்பு நாள் : 21.06.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.07.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Junior Scientific Officer உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 21.06.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.07.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 24.08.2019 .
  • இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html

தமிழக அரசின் தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான தேர்வு ஆகஸ்டு 24-ல் நடைபெறுகிறது. இதற்கு ஜூலை 22 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசின் தடயவியல் துறையில் 64 இளநிலை அறிவி யல் அதிகாரி பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப் பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்டு 24-ம் தேதி நடை பெறும். இப்பணிக்கு எம்.எஸ்சி. தடயவியல், விலங்கியல், தாவர வியல், உயிரி வேதியியல், நுண்ணு யிரியல், உயிரி தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், கம்ப் யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்களில் 40 இடங்கள் வேதியியல் பிரிவுக்குரி யவை. வயது வரம்பு பொதுப்பிரி வினருக்கு 30, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்) வயது வரம்பு ஏதும் கிடை யாது. எழுத்துத்தேர்வில், சம்பந்தப் பட்ட பாடப்பிரிவில் 200 கேள்வி களும், பொது அறிவு பகுதியில் 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 500. எழுத்துத்தேர்வில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதற்கு 70 மதிப்பெண். தகுதியுடைய முது கலை பட்டதாரிகள் தேர்வாணை யத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பார்வையிட்டு ஜூலை 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக்கட்டணம், தேர்வுமை யம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத் தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
Share:

tnpsc குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சைதை துரைசாமி மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் பங்கு பெற்று இதுவரை 3 ஆயிரத்து 366 பேர் வெற்றி அடைந்து, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். குரூப்-4 தேர்வு அதன் தொடர்ச்சியாக, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப்-4 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கும் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்கு, அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி இருக்கிறது. இந்த பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுபவர்கள் மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கலாம். இந்த பயிற்சி பெற www.mnt-f-r-e-e-ias.com என்ற மனிதநேய இணையதளத்தில் Re-g-ist-er for TN-P-SC Gr.IV Ex-am 2019 என்ற இணைப்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவர்களுக்கு தேர்வுகள், வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்தகவலை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Assistant Electrical Inspector, Assistant Engineer, Junior Architect உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 481. ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம் : 29.05.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Assistant Electrical Inspector, Assistant Engineer, Junior Architect உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 481.
  • ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம் : 29.05.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.
  • இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html
  • For Regular Updates Click Like button | https://www.facebook.com/kalvisolai.job.alert
  • For Regular Updates JION WHATS APP | https://chat.whatsapp.com/ET5OgSpJAKn8IpsTUiWt34
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : SOCIOLOGIST AND ECONOMIST உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : அறிவிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம் : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : SOCIOLOGIST AND ECONOMIST உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : அறிவிக்கப்படும்.
  • ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம் : 24.06.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019.
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in

Share:

டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக அந்த மையத்தின் வடசென்னை ஒருங் கிணைப்பாளர் என்.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை உதவியாளர், தட்டச் சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். இதற்கு ஜூலை 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலைவாய்ப்பு உறுதி என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும். இத்தேர்வுக்கு டாக்டர் அம்பேத் கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்ளன. இதில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏனைய பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இதற்கான பயிற்சி வகுப்புகள் பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் கோயில் அக்ர ஹாரம் சிஐடியு அலுவலக கட்டிடத் தில் வாரம்தோறும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். வகுப்புகள் வரும் சனிக் கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றன. பயிற்சி பெற விரும்புவோர் பின்வரும் ஒருங்கிணைப்பாளர் களை செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாலாஜி - 98847 47217, மோகன் - 93449 51475, வாசுதேவன் - 94446 41712. பயிற்சி வகுப்புக்கு வரும் பொழுது மார்பளவு போட்டோவும், குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலையும் தவறாமல் கொண்டு வர வேண்டும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
Share:

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .

  • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
  • பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .
  • இணைய முகவரி : www.ibps.in .

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தற்போது இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள குரூப் ஏ அதிகாரி மற்றும் குரூப் பி அலுவலக உதவியாளர்(பல்நோக்கு) பணியிடங்களை நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம் மற்றும் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள், வயதுவரம்பு பற்றிய விவரங்களை அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தனித்தனியே பார்க்கலாம்.

பணி மற்றும் தகுதி விவரங்கள்​:
பணி: Office Assistant (Multipurpose) - 3688
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் வங்கி அமைந்துள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale I - 3381
பணி: Officer Scale II (Agriculture Officer) - 106
பணி: Officer Scale II (General Banking Officer) - 693
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. கணினி குறித்தும் படித்திருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 - 30, 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale II (Marketing Officer) - 45
பணி: Officer Scale II (Treasury Manager) - 11
பணி: Officer Scale II (Law) - 19
பணி: Officer Scale II (CA) - 24
பணி: Officer Scale II (IT) - 76
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Electronics, Communication, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA அல்லது MBA (சந்தையியல், நிதி) முடித்திருக்க வேண்டும். அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது விவசாயம், கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer Scale III - 157
தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் IBPS-ஆல் நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். பின்னர் தேவையான பயிற்சிக்குப் பின் நிரந்தரப் பணி வழங்கப்படும். நேர்முகத்தேர்வின்போது தேவையான சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய கையொப்பமிடப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600/-. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100/-. இதனை கிரெடிட், டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் கணினியில் வழங்கப்படும் e-recepit-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பற்றிய விவரங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். தகவல் பெற்றவுடன் IBPS இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள Call Letter-ஐ பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விவரங்களை அறிய www.ibps.in அல்லது https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்

ஆன்லைன் தேர்வுக்கு உரிய Call Letterஐ ஜூலை 2019 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி:04.07.2019


Share:

INDIA POST RECRUITMENT 2019 | INDIA POST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : PLI AGENT மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.07.2019

  • INDIA POST RECRUITMENT 2019 | INDIA POST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : PLI AGENT  
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப 
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.07.2019
  • இணைய முகவரி : www.indiapost.gov.in

Share:

TN COURT RECRUITMENT 2019 | TN COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : ஓட்டுனர் மற்றும் தோட்டக்காரர் பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 54 விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2019

  • TN COURT RECRUITMENT 2019 | TN COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : ஓட்டுனர் மற்றும் தோட்டக்காரர் பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 54
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.06.2019
  • இணைய முகவரி : www.mhc.tn.gov.in

Share:

MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Junior Research Fellow. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1. விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2019.

  • MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Junior Research Fellow.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2019.
  • EMAIL முகவரி :  pkalaiselvi2011@gmail.com 
Applications are invited for the post of Junior Research Fellow in the Department of Medical Biochemistry 

Share:

MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : LAB TECHNICIAN பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2019

  • MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : LAB TECHNICIAN  பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2019
  • EMAIL முகவரி :  pkalaiselvi2011@gmail.com
Applications are invited for the post of Lab Technician in the Department of Medical Biochemistry 

Share:

கிராம வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 17-ந் தேதி தொடங்குகிறது

கிராம வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர் தேர்ந்தெடுப்பதற் கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 17, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 4.7.2019 ஆகும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மேலும் தேர்வு பற்றிய விவரங்களை www.ibps என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம்(ஜூலை) 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுப்பதற்கு, வெளியில் செல்வதற்கு அனுமதி கிடையாது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17-7-2019 அன்று விடுதியில் நேரில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3 ஆயிரத்துக்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 10.07.2019-க்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.
Share:

MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : கௌரவ விரிவுரையாளர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75 விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019

  • MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : கௌரவ விரிவுரையாளர்  உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019
  • இணைய முகவரி : www.unom.ac.in
  • விண்ணப்பம் மற்றும் விளக்கங்கள் : DOWNLOAD

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் 75 தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கும், ஆராய்ச்சியுடன் கூடிய 17 ஆசிரியர் பணி இடங் களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களும், விண்ணப்ப படிவமும் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ந்தேதி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications are invited for the posts of Guest Faculty Full Time/ Teaching–cum-Research Fellow in the University Departments for the Academic Year 2019-20
Share:

TIRUVARUR DISTRICT COURT RECRUITMENT 2019 | TIRUVARUR DISTRICT COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : Assistant, Computer Operator, Jr Bailiff, and others உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 48 விண்ணப்பிக்க கடைசி நாள் : 25 June 2019

  • TIRUVARUR DISTRICT COURT RECRUITMENT 2019 | TIRUVARUR DISTRICT COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : Assistant, Computer Operator, Jr Bailiff, and others உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 48
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25 June 2019
  • இணைய முகவரி : DOWNLOAD
Post-Wise Vacancies:

  • Computer Operator- 4 post
  • Senior Bailiff- 5 posts
  • Examiner-3 posts
  • Reader- 1 posts
  • Junior Bailiff-7 posts
  • Xerox Operator- 5 post
  • Office Assistant – 9 posts
  • Night Watchman- 7 posts
  • Masalchi-3 posts
  • Sweeper- 3 posts
  • Sanitary Worker- 1 post
Share:

வேலைதேடும் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் மாநில வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையர் தகவல்

வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடர்பான ஆலோச னைகள் வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் இயங்கி வருவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கி உதவி செய்வததற்காக தமிழக அரசால் மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சென்னை கிண்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்டது. இளைஞர்களுக்கு உளவியல் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் வழங்குவது போன்றவை இம்மையத்தின் தலையாய பணிகள் ஆகும். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு, சுயதொழில் தொடங்கும் வகையில் தொழில்முனைவோர் திறனை ஊக்குவித்தல், வேலையளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக எஸ்எம்எம் மூலம் தகவல் அனுப்புதல் போன்ற பணிகளையும் இம்மையம் செய்து வருகிறது. இந்த மையத் தில் உள்ள உளவியல் ஆலோசகர்கள் திறன் மதிப்பீடு, உளவியல் தேர்வு நடத்தி இளைஞர் களின் அறிவுத்திறன், ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து அதற்கேற்ப தொழில் மற்றும் மேற்படிப்புக்கும் வழிகாட்டுவார்கள். மேலும், இங்கு மத்திய-மாநில அரசுகளின் போட்டித்தேர்வு களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், மாதிரித்தேர்வுகளும் மாதிரி நேர்காணல்களும் நடத்தப்படுகின்றன. இந்த மையம் கீழ்க்காணும் முகவரியில் செயல்பட்டு வருகிறது. மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம், ஏ-28, முதல் மாடி, டான்சி தலைமை அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண்கள்: 044-22500134, 29530134. மின்னஞ்சல் முகவரி: statecareercentre@gmail.com இந்த மையம் அனைத்து அரசு வேலை நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். வேலை தேடும் இளைஞர்கள் இந்த சிறப்பு வழிகாட்டு மையத்தில் வழங்கப்படும் சேவைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள். இவ்வாறு ஜோதி நிர்மலா சாமி கூறியுள்ளார்.
Share:

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இத்தேர்வு மூலம் 6,491 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப்-4 தேர்வுக்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 23-ம் தேதி அறிமுக வகுப்பு இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்பு வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 86680-38347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். அரசு வேலைகளுக்கான தேர்வுகளை எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்குள் நேரில் வந்தும் பெயரை பதிவுசெய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share:

சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 20-ந்தேதி தொடங்குகிறது

ரெயில்வே குரூப்-டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. ரெயில்வே துறை நடத்தும் டிராக்மேன், ஹெல்பர் போன்ற குரூப்-டி காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. குரூப்-டி எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெறுகிறது. மேற்கண்ட தேர்வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.6,000 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் தங்கும் வசதி, உணவு கட்டணம் ரூ.4,000-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 20-ந்தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் திருச்செந்தூர் தூத்துக்குடி ரோட்டில் உள்ள சிவந்தி அகாடமியில் 20-ந்தேதி காலை 9 மணிக்கு பயிற்சி கட்டணம் ரூ.6,000-ஐ நேரில் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற தொலைபேசி எண்ணிலும், 94420 55243, 86829 85148 ஆகிய அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.
Share:

குரூப் 4 தேர்வுக்கான விங் TNPSC அகாடமியின் இலவச கருத்தரங்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச கருத்தரங்கம் இக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தொலைபேசி எண்ணில் தங்கள் விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.விங் TNPSC அகாடமி .

Share:

TNPSC குரூப்-4 மற்றும் வி ஏ ஓ பணியிடங்களுக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமியின் இலவச மாதிரி வகுப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-4 மற்றும் வி ஏ ஓ பணியிடங்களுக்கு இலவச மாதிரி வகுப்புகளை சத்யா ஐஏஎஸ் அகாடமி நடத்த இருக்கின்றது இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். விரிவான விவரங்கள்...
Share:

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி

யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் இலவசப் பயிற்சியை சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கவுள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சகம் மற்றும் சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இப்பயிற்சியை வழங்க உள்ளன. மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் மூலம் யூபிஎஸ்சி தேர்வுக்கு 50 பேரும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு 50 பேரும் தேர்வு செய்யப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்கும். சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மூலம் யூபிஎஸ்சி தேர்வுக்கு 25 மாணவ, மாணவியர் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட 2 முறையிலான இலவச பயிற்சிகளுக்கும் நடப்பு நிகழ்வுகள், கட்டுரை எழுதுதல் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இலவச பயிற்சி தேர்வுக்கு இன்றுமுதல் (ஜூன் 13) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 28 கடைசி தேதி. எழுத்துத் தேர்வு ஜூன் 30-ம் தேதி நடைபெறும். இத்தேர்வின் முடிவுகள் ஜூலை 9-ம் தேதி வெளியிடப்படும். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இலவச பயிற்சி தேர்வுக்கு www.shankariasacademy.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7339670333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி எழுத்துத் தேர்வுக்கான தேதி மற்றும் நேர்முகத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

THALAMUS COACHING CENTRE - VILLUPURAM (TRB PG ZOOLOGY)


Share:

KANCHI ACADEMY - DHARMAPURI (TRB PG TAMIL)

Share:

வேலை - கால அட்டவணை - 17 JUNE 2019

✅ TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
✅ பதவி : முதுகலை ஆசிரியர்
✅ மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144
✅ ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019
✅ விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
*****************
✅ TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு
✅ பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி
✅ கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
✅ மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491
✅ விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019
✅ தேர்வு நாள் : 01.09.2019
Share:

SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1500. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019 .

  • SECL RECRUITMENT 2019 | SECL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு .
  • பதவி : டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1500.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.07.2019 .
  • இணைய முகவரி : http://www.secl-cil.in/ .
நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 5 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:- மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று எஸ்.இ.சி.எல். (SECL) எனப்படுகிறது. தென்கிழக்கு பிராந்திய நிலக்கரி சுரங்கங்கள் இந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளம்பர், கார்பெண்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பிட்டர் உள்ளிட்ட பிரிவில் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன. 8,10-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேரலாம். விண்ணப்பதாரர் 23-7-2019-ந் தேதியில் 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் நிலக்கரி நிறுவன இணையதளத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 23-ந் தேதியாகும். இதுபற்றிய விவரங்களை http://www.secl-cil.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : உதவி இயக்குனர், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 337 விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019

  • NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவி இயக்குனர், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணி.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 337 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019 .
  • இணைய முகவரி : http://nyks.nic.in/ .
இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அதிகாரி வேலை நேரு யுவகேந்திரா சங்கேதன் (NYKS) மத்திய அரசு அமைப்புகளில் ஒன்றாகும். இளைஞர் மேம்பாட்டு நல அமைப்பான இதில் தற்போது உதவி இயக்குனர், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், உதவியாளர், அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட் , ஸ்டெனோ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 337 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உதவி இயக்குனர்-மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மட்டும் 160 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதுநிலை பட்டதாரிகள் உதவி இயக்குனர்-மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் ஜூனியர் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணிக்கும், பட்டதாரிகள் உதவியாளர் மற்றும் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 10, பிளஸ்-2 படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 28 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றிய அறிவிப்பு 30-5-2019-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய விரிவான விவரங்களை http://nyks.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : அதிகாரி பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 417 விண்ணப்பிக்க கடைசி நாள் : 8-7-2019

  • UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : அதிகாரி பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 417
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 8-7-2019
  • இணைய முகவரி : www.upsconline.nic.in

முப்படை அதிகாரி பணிகளுக்கு 417 காலியிடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (சி.டி.எஸ்.-2019(2)) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 417 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இந்திய மிலிட்டரி அகாடமியில் 100 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப்படை அகாடமியில் 32 பேரும், சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் 225 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் 2-7-1996 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் 1-7-2019 தேதியில் 20 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் சேரும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் பள்ளிப் படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படையில் சேருபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 8-7-2019. தேர்வுக்கான கட்டணங்களை ஆப்லைன் முறையில் 7-7-2019-ந் தேதிக்குள்ளும், ஆன்லைன் முறையில் 8-7-2019-ம் தேதிக்குள்ளும் செலுத்தவேண்டும். இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : திறன் சார்ந்த (ஸ்கில்டு) மற்றும் திறன் சாராத பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1378. விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2019.

  • BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : திறன் சார்ந்த (ஸ்கில்டு) மற்றும் திறன் சாராத பணி.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1378.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2019.
  • இணைய முகவரி : www.becil.com.
மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ஒளிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனம் பி.இ.சி.ஐ.எல். எனப்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான இது, ஒப்பந்த அடிப்படையில் திறன் சார்ந்த (ஸ்கில்டு) மற்றும் திறன் சாராத பணியிடங்களுக்கு தகுதியானவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரி உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 1100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் திறன் சார்ந்த பணிகளுக்கு 400 இடங்களும், திறன் சாராத பணிகளுக்கு 700 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம். திறன் சார்ந்த பணிகளுக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். திறன் சாராத பணிகளுக்கு 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், வயர்மேன் போன்ற ஐ.டி.ஐ. படிப்புகளை படித்தவர்கள் திறன் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் திறன் சாராத பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்தினால் போதுமானது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து வருகிற 24-ந்தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இதே நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் அட்டண்டன்ட், வரவேற்பாளர், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட அலுவலக பணி களுக்கு 278 பேரை தேர்வு செய்ய மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8,10,12-ம் வகுப்பு படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பி.சி.ஏ., பி.காம் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். தபால் மூலமாக விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் ஜூன் 30-ந்தேதியாகும். இவை பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

CIPET RECRUITMENT 2019 | CIPET அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : விரிவுரையாளர், நூலகர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 81 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-6-2019.

  • CIPET RECRUITMENT 2019 | CIPET அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : விரிவுரையாளர், நூலகர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 81 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-6-2019.
  • இணைய முகவரி : www.cipet.gov.in .

பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மத்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமான சிபெட்டில் (CIPET) தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. விரிவுரையாளர் பணிக்கு 24 இடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 43 இடங்களும், நூலகர் பணிக்கு 11 இடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம், கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.cipet.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். விண்ணப்பம் தபால் வழியில், வருகிற 24-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் உதவி பிளேஸ்மென்ட் அதிகாரி, லேப் இன்ஸ்ட்ரக்டர் போன்ற பணிகளுக்கு 81 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான முழுமையான விவரங்களையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 24-6-2019.
Share:

IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2019.

  • IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பயிற்சிப் பணி.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2019.
  • இணைய முகவரி : https://plis.indianoilpipelines.in.

இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்.) பல்வேறு மண்டலங்களிலும் பைப்லைன் பிரிவில் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்து ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு, ஜூன் 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Share:

MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 36 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019.

  • MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 36 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019.
  • இணைய முகவரி : https://www.mrpl.co.in/ .

மங்களூரு எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனத்தில் (எம்.ஆர்.பி.எல்.) என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். பி.இ.பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள் என்ஜினீயர் பணிக்கும், எம்.எஸ்சி. படித்தவர்கள் லேப் சூபர்வைசர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.mrpl.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, ஜூலை 4-ந்தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Share:

BARC RECRUITMENT 2019 | BARC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : ஒர்க் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 74 விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.07.2019

  • BARC RECRUITMENT 2019 | BARC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : ஒர்க் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 74
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.07.2019
  • இணைய முகவரி : http://www.barc.gov.in

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், சுருக்கமாக பி.ஏ. ஆர்.சி. (BARC) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஒர்க் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஜூலை 1-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.barc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Share:

NCLCIL RECRUITMENT 2019 | NCLCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வெல்டர், எலக்ட்ரீசியன், பிட்டர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2482 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.

  • NCLCIL RECRUITMENT 2019 | NCLCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : வெல்டர், எலக்ட்ரீசியன், பிட்டர் உள்ளிட்ட பணி.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2482 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.
  • இணைய முகவரி : www.nclcil.in .

சுரங்க நிறுவனத்தில் 2482 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்களும், ஐ.டி.ஐ. முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். வடக்கு மண்டலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது வெல்டர், எலக்ட்ரீசியன், பிட்டர் மற்றும் மோட்டார் மெக்கானிக் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் மொத்தம் 2482 பேர் பணிவாய்ப்பு பெற உள்ளனர்.பிரிவு வாரியாக உள்ள காலியிட விவரம் : வெல்டர்: 162, எலக்ட்ரீசியன்: 1260, பிட்டர்: 840, மோட்டார் மெக்கானிக்: 220. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்க்கலாம்.

வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 30-9-2018 அன்று, 16 வயது நிரம்பியவர்களாகவும், 24 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி
பணிவாய்ப்பிற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஐ.டி.ஐ. படிப்பு முடித்தவர்களும், 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ‘ஸ்டேஜ்-1’ விண்ணப்ப முறையை பூர்த்தி செய்யவேண்டும். இதற்கு பின்னர் ‘ஸ்டேஜ்-2’ விண்ணப்ப முறையையும் பூர்த்தி செய்து, முழுமைப்பெற்ற விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-7-2019.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nclcil.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Share:

TNPL RECRUITMENT 2019 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சமையற்காரர்கள்(ஆண்) உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 05 விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019.

  • TNPL RECRUITMENT 2019 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : சமையற்காரர்கள்(ஆண்) உள்ளிட்ட பணி.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 05
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019.
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com .

கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்(டிஎன்பிஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சமையற்காரர்கள்(ஆண்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செட்டிநாடு சமையற்காரர்கள்(ஆண்) காலியிடங்கள்: 05 சம்பளம்: மாதம் ரூ.15,600 வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் செட்டிநாடு உணவு வகைகள் (சைவம் மற்றும் அசைவம்) சமைக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தந்தூரி மற்றும் சைனீஸ் உணவுகள் சமைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவுக்கொண்ட வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: K.Natarajan(TNPL), TNPL Regional Office, No.1/6, Sri Variarcade, 2nd Floor, Shamuga Raja Road, Near Ambedkar Statue, Karaikudi - 630 001 Sivagangai - Dt. Mobile - 94425 91436. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2019
Share:

BEL RECRUITMENT 2019 | BEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : பொறியாளர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 25 விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.06.2019

  • BEL RECRUITMENT 2019 | BEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : பொறியாளர் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 25
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.06.2019
  • இணைய முகவரி : www.bel-india.in

BEL நிறுவனத்தில் பொறியாளர் வேலை பொதுத்துறை நிறுவனமான "பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineers காலியிடங்கள்: 25 துறைவாரியான காலியிடங்கள்: மெக்கானிக்கல் - 05, எலக்ட்ரானிக்ஸ் - 20 சம்பளம்: மாதம் ரூ.01.05.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஅல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2019 (எழுத்துத் தேர்விற்கான் அழைப்பு கடிதம் 01.07.2019 தேதிக்குப் பின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2019.
Share:

BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : செவிலியர் பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019.

  • BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : செவிலியர் பணி.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019.
  • இணைய முகவரி : www.becil.com .

BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Staff Nurse காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.30,000 தகுதி: General Nursing பிரிவில் 3 ஆண்டு டிப்பளமோ, இளநிலை பட்டம் பெற்று செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை Broad Cast Engineering Consultants India Limited என்ற புதுதில்லியில் மாற்றத்தக்க வநகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager(HR), BECIL Corporate Office at BECIL Bhawan, C-56/A-17,Sector-62, Nodia - 201307(U.P) விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.06.2019
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி
  • கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019
  • தேர்வு நாள் : 01.09.2019
  • இணைய முகவரி : http://tnpscexams.in/

இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலியிடங்களை நிரப்பு வதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நேற்று தொடங்கியது. வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட் டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-2) மற்றும் வரைவாளர், வரித்தண்டலர் ஆகிய 8 விதமான பதவிகளில் 6,491 காலியிடங் களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக் கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய தொழில்நுட்ப பதவிகள் நீங்கலாக இதர பதவி களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பு வெவ்வேறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனி னும் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந் தால் (பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல்) அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்றும் தகுதி யுடையவர்கள் தேர்வாணையத் தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூலை 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுக்கான அறிவிக்கை வெளியான வெள்ளிக்கிழமை (நேற்று) முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. குரூப்-4 தேர்வைப் பொறுத்தவரை, நேர் முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே போதுமானது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (இரண்டில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்) 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண் கள். தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜனவரியி லும் அதைத்தொடர்ந்து கலந் தாய்வு பிப்ரவரியிலும் நடத் தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
Share:

TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019

  • TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : முதுகலை ஆசிரியர்
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144
  • ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
  • இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in

TRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்
காலி பணியிடங்கள்: 2144
தமிழ் : 319
ஆங்கிலம் : 223
கணிதம்: 279
இயற்பியல் : 210
வேதியியல் : 356
தாவரவியல் : 154
விலங்கியல் : 144
வரலாறு : 104
புவியியல் : 11
பொருளியியல்: 211
வணிகவியல் : 99
Political science : 14
Physical education : 16
Bio chemistry : 1
Micro biology : 1
Home science : 1
Indian culture : 1
கல்வித் தகுதி : PG with B.Ed.,
Share:

ANNA UNIVERSITY RECRUITMENT 2019 | ANNA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : உதவி பேராசிரியர் பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019

  • ANNA UNIVERSITY RECRUITMENT 2019 | ANNA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : உதவி பேராசிரியர் பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தேவைக்கு ஏற்ப
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது

Share:

CUTN RECRUITMENT 2019 | CUTN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : கெஸ்ட் பகல்டி உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 88 நேர்காணல் நாள் : 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை

  • CUTN RECRUITMENT 2019 | CUTN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : கெஸ்ட் பகல்டி உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 88
  • நேர்காணல் நாள் : 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை
  • இணைய முகவரி : https://cutn.ac.in

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘கெஸ்ட் பகல்டி’ பணியிடங்களுக்கு 88 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் பங்கேற்க முடியும். வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://cutn.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : மருத்துவ அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 107 விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019

  • ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : மருத்துவ அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 107
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.06.2019
  • இணைய முகவரி : www.ongcindia.com

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) மருத்துவ அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 18-6-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. எம்.பி.பி.எஸ், சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ., பி.டெக், பயர் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ongcindia.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Share:

EIL RECRUITMENT 2019 | EIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : மேனேஜ்மென்ட் டிரெயினி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019

  • EIL RECRUITMENT 2019 | EIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : மேனேஜ்மென்ட் டிரெயினி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
  • இணைய முகவரி : http://www.engineersindia.com/

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை http://www.engineersindia.com/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-ந்தேதியாகும்.
Share:

NMDC RECRUITMENT 2019 | NMDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 நேர்காணல் நாள் : 15-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை

  • NMDC RECRUITMENT 2019 | NMDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180
  • நேர்காணல் நாள் : 15-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை
  • இணைய முகவரி : www.nmdc.co.in

மத்திய உருக்கு ஆணையத்தின் கீழ் செயல்படும் சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி.யில், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பயிற்சிப் பணியில் சேரலாம்.
விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வருகிற 15-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. அந்தந்த பணிக்கான நேர்காணல் எந்த தேதியில் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேரில் செல்லவும். முதலில் www.ncvtmis.gov.in என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்து பின்னர், நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இது பற்றிய விவரங்கள் www.nmdc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

REPCO BANK RECRUITMENT 2019 | REPCO BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40 விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019

  • REPCO BANK RECRUITMENT 2019 | REPCO BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
  • இணைய முகவரி : www.repcobank.com

இலங்கை மற்றும் பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியான ரெப்கோ வங்கியில், ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் பணிக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 7-7-2019-ந்தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.repcobank.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

AAI RECRUITMENT 2019 | AAI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 176 விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019

  • AAI RECRUITMENT 2019 | AAI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 176
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
  • இணைய முகவரி : https://aaiclas-ecom.org/Live/Career.aspx

இந்திய விமான ஆணைய நிறுவனமான ஏ.ஏ.ஐ.- யின் கீழ் செயல்படும் துணை நிறுவனம், ‘கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்’. தற்போது இந்த நிறுவனத்தின் சென்னை விமான தளத்தில் செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மொத்தம் 176 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 95 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மண்டல மொழியறிவு பெற்றிருக்க வேண்டும். விமான போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அடிப்படை சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 1-6-2019-ந் தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உயரத்தில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விமானதள பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மற்றவர்கள் உடல் உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் புதுடெல்லியில் உள்ள கார்கோ லாஜிஸ்டிக்ஸ் தலைமை நிறுவன முகவரியை சென்றடைய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://aaiclas-ecom.org/Live/Career.aspx என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Share:

MECON RECRUITMENT 2019 | MECON அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : அக்கவுண்டன்ட், சேப்டி ஆபீசர், புராஜெக்ட் என்ஜினீயர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 205 விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019

  • MECON RECRUITMENT 2019 | MECON அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : அக்கவுண்டன்ட், சேப்டி ஆபீசர், புராஜெக்ட் என்ஜினீயர் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 205
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
  • இணைய முகவரி : www.meconlimited.co.in

மத்திய உருக்குத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று மெக்கான். மினிரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது பொறியியல் மற்றும் பொறியியல் சாராத பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
எக்சிகியூட்டிவ், அக்கவுண்டன்ட், சேப்டி ஆபீசர், புராஜெக்ட் என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு தகுதி வேறுபடுகிறது. 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாக கோரப்பட்டு உள்ளது. சிவில், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கணிசமான பணியிடங்கள் உள்ளன. பிசியோதெரபி, ரேடியோகிராபி டிப்ளமோ படிப்புகள், எம்.பி.ஏ. மற்றும் பிஸினஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.meconlimited.co.in. என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Share:

INDIAN RAILWAY RECRUITMENT 2019 | INDIAN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : சூப்பிரவைசர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 74 நேர்காணல் நாள் : சென்னையில் 15-ந் தேதி

  • INDIAN RAILWAY RECRUITMENT 2019 | INDIAN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : சூப்பிரவைசர் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 74
  • நேர்காணல் நாள் : சென்னையில் 15-ந் தேதி
  • இணைய முகவரி : www.irctc.com

ரெயில்வே சுற்றுலா கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் தெற்குமண்டலத்தில் சூப்பிரவைசர் ஹாஸ்பிடாலிட்டி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன், புட் அண்ட் பீவரேஜ் நிறு வனத்தில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், இந்த பணிக்கான நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, நேர்காணலில் பங்கேற்க வேண்டும். திருவனந்தபுரத்தில் 11-ந் தேதியும், பெங்களூருவில் 13-ந் தேதியும், சென்னையில் 15-ந் தேதியும் நேர்காணல் நடக்கிறது. தேவையான சான்றுகளை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.irctc.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

Popular Posts

Search This Blog

Labels

@ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
Back to TOP

Get Latest Updates: Follow Us On WhatsApp

Contact Form

Name

Email *

Message *

Labels

Blog Archive

Recent Posts

Pages

பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.