Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : காப்பாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 04 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2019. டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி! தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Curator காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.36700 -116200 வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. தகுதி: விலங்கியல், தாவரவியல், புவியியல், மானுடவியல் அல்லது இந்திய தொல்லியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே. எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவை. எழுத்துத் தேர்வு தாள்- 1, தாள் -II என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு 70 மதிப்பெண்கள் என 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2019
Share:

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியா் என்ஜினீயா் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-02-2019.

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியா் என்ஜினீயா் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-02-2019. மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் ஒன்று பெங்களூரு மெட்ரோ. சுருக்கமாக பி.எம்.ஆர்.சி.எல். என அழைக்கப்படும் இந்த நிறுவனம் தற்போது ஜூனியா் என்ஜினீயா், செக்சன் என்ஜினீயர் மற்றும் மெயின்டனர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 174 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மெயின்டனர் பணிக்கு 134 இடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 21 இடங்களும், செக்சன் என்ஜினீயர் பணிக்கு 19 இடங்களும் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூ‌னியர் என்ஜினீயர் பணிக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் செக்சன் என்ஜினீயர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 02-02-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bmrc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NTP RECRUITMENT 2019 | NTP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 207 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

NTP RECRUITMENT 2019 | NTP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 207 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019. அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் அனல்மின் நிறுவனத்தில் ‘கேட்’ தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தேசிய அனல்மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி-2019 பணியிடங்களை கேட் 2019 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : எலக்ட்ரிக்கல் - 47, மெக்கானிக்கல் - 95, எலக்ட்ரானிக்ஸ் - 25, இன்ஸ்ட்ருமென்டேசன் - 25, மைனிங் - 15. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 31-1-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், புரொடக்சன், தெர்மல், மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன், பவர் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், மைன் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019 தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ICF RECRUITMENT 2019 | ICF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் வேலை | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 220 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-2-2019.

ICF RECRUITMENT 2019 | ICF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் வேலை | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 220 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-2-2019. ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை 220 பேருக்கு வாய்ப்பு சென்னை ஐ.சி.எப்.-ல் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பட்டதாரிகளுக்கு 100 இடங்களும், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 120 இடங்களும் உள்ளன. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 30 இடங்களும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 70 இடங்களும் உள்ளன. டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு 40 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 80 இடங்களும் உள்ளன. அப்ரண்டிஷிப் விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்புடையவர்கள் பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.boat-srp.com என்ற இணையதளத்தில் 28-2-2019-ந் தேதி வெளியிடப்படும். இது பற்றிய விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 14 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-02-2019.

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 14 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-02-2019. ராணுவத்தில் சட்டம் படித்தவர்கள் சேரலாம்,. ராணுவத்தில் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம் (JAG 23-வது பேட்ஜ்) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போதைய 23-வது சேர்க்கையில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர விரும்பபுபவர்கள் 1-7-2019 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எல்.எல்.பி. சட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணைய தளம் வழியாக 14-02-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Share:

IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப் பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 420 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.

IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப் பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 420 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 420 பயிற்சிப் பணிகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் பயிற்சிப் பணிகளுக்கு 420 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (I.O.C.L.) என அழைக்கப்படுகிறது. உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறும் இந்தியாவின் முன்னணி நிறு வனங்களில் ஒன்று இது. தற்போது இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு வி்ண்ணப்பிக்கலாம். மொத்தம் 420 பேர் இந்த பயிற்சிப் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 241 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 106 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 10 இடங்களும் உள்ளன. மாநில வாரியான இடங்கள், பணிப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அடைப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 31-12-2018-ந் தேதியில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்ககளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பிட்டர், எலக்ட்ரிசீயன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல் அண்ட், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐ.டி.ஐ படித்தவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இந்த பயிற்சிப் பணிகளில் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் www.apprenticeship.gov.in என்ற இணைய தளத்தில் பெற்று விண்ணப்பதாரர் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் www.iocl.com என்ற இணைய தளம் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் வருகிற பிப்ரவரி 10-ந் தேதியாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள ஐ.ஓ.சி.எல். இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

TNPSC குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

TNPSC குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, பல்வேறு அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர் முதல் உதவி கலெக்டர் வரை பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. இவற்றில் பெரும்பாலானவர்கள் எழுதும் தேர்வுகளாக குரூப்-4 மற்றும் குரூப்-2 தேர்வுகள் விளங்குகின்றன. பல்வேறு துறைகளில் ஏராளமான காலியிடங்கள் இந்த தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவது இதற்கு முக்கிய காரணமாகும். அதே வேளையில் டி.என்.பி. எஸ்.சி. நடத்தும் முக்கிய தேர்வுகளில் ஒன்று குரூப்-1 தேர்வு. தமிழக அரசின் உயர் பதவி களுக்கான தேர்வாக இது விளங்குகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற தமிழக அரசின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்ட தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உடற்தகுதியும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். தற்போது குரூப்-1 பணிகளுக்கு 139 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் உள்ள பணியிடங்கள் எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். வருகிற 31-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சமூகத்தில் சிறந்த மதிப்பும், நல்ல ஊதியமும் பெற்றுத்தரும் குரூப்-1 பணியை பெறுவதில் இளைஞர்கள் மத்தியில் பெருங் கனவு உள்ளது. உங்கள் லட்சியத்தை வென்றுமுடிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வெற்றி நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்... விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பற்றியும், தேர்வு முறை பற்றியும் முதலில் தெளிவாக அறிந்து கொண்டு தயாராக வேண்டும். குரூப்-1 தேர்வின் முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு பட்டப் படிப்பு தரத்தில் இருப்பதால் பள்ளிப் கல்லூரி பாடத்திட்டங்களுடன் பொதுவான தகவல் திரட்டுடன் தயாராவது நல்ல பலன் தரும். வினாக்களை ரீசனிங், குவான்டிடேடிவ், ஜெனரல் ஸ்டடி என 3 வகையாக பிரிக்கலாம். ஜெனரல் ஸ்டடியில் பாடத்திட்டங்கள் சார்ந்து மட்டுமல்லாமல், பொது அரசியல், நடப்பு நிகழ்வுகள், கலாச்சாரம், பொருளாதாரம் என எந்தத்துறை சார்ந்த கேள்வியும் கேட்கப்படலாம். எனவே அதற்கேற்ப பரந்த தயாரிப்புகள் தேவை. ரீசனிங் மற்றும் குவான்டிடேடிவ் பகுதி வினாக்கள் பெரும்பாலும் கணிதம் மற்றும் சூழல் சார்ந்ததாக இருக்கும். விதவிதமான மாதிரிகளுக்கு விடைகண்டறிந்து பயிற்சி பெறுவது, எளிதில் விடையளிக்கவும், அதிக மதிப்பெண் பெறவும் துணை செய்யும். மெயின் தேர்வு தாள்-1, தாள் 2, தாள் 3 என பிரித்து நடத்தப்படுகிறது. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மெயின் தேர்வில் வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் பொது அறிவு, நடப்பு நிகழ்வு பகுதியில் நுட்பமான கேள்விகளும், கட்டுரை எழுதும் பகுதியும் இடம் பெறும். நேர்காணலில் மேலாண்மைப் பண்புகள் சோதிக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பி.டி.எப். கோப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து படிப்பது நல்ல பலன் தரும். குரூப்-1 பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் வாங்கிப்படித்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம். முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளின் வினாக்களை நன்கு பயிற்சி செய்வது சிறந்த பலன் தரும். பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பதுடன், தொடர்முயற்சி செய்வது அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் முறையில் முன்னணி பெற துணை செய்யும். மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வு போல குறிப்பிட்ட முறைக்குமேல் எழுத முடியாது என்ற கட்டாயம் இல்லை என்பதால் வயதுவரம்பு இருக்கும் வரை மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்யலாம். பல வழிகளில் தகவல்களை திரட்டுதல், புரிந்து படித்தல், கடினமான வினாக்களுக்கு எளிய வழிகளில் தீர்வு காணும் முறை, படித்ததை நினைவில் ஏற்றுதல், விடா முயற்சியுடன் படித்தல், மனதில் பாரம் ஏற்றாமல் மனஅழுத்தம் குறைத்து, போதிய ஓய்வு எடுத்து படித்தல், குழுவாக முயற்சி செய்தல், தகுந்த பயிற்சியாளர், உதவியாளரின் ஆலோசனைப்படி நடத்தல் என திட்டமிட்ட முயற்சி உங்களுக்கு வெற்றிக் கனியை எளிதாக பறிக்க உதவியாக இருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Share:

CISF RECRUITMENT 2019 | CISF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஹெட்கான்ஸ்டபிள் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 429 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-2-2019.

CISF RECRUITMENT 2019 | CISF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஹெட்கான்ஸ்டபிள் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 429 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-2-2019. துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள் துணை ராணுவ படையில் 429 ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்த பிரிவில் தற்போது ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 429 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி சேர்க்கையின் மூலம் 328 ஆண்களும், 37 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். 64 பணியிடங்கள் எல்.டி.சி.இ. (துறையினருக்கான போட்டி) இடங்களாகும். இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 20-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பிளஸ்-2 மற்றும் இன்டர்மீடியட் படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. உடல்தகுதி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையளவு, கண்பார்வைத்திறன் பரிசோதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகிறது. தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.cisf.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Share:

MNNIT RECRUITMENT 2019 | MNNIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 142 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019

MNNIT RECRUITMENT 2019 | MNNIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 142 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019. உதவி பேராசிரியர் பணி மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் (MNNIT), அலகாபாத்தில் செயல்படும் இந்த கல்வி மையத்தில் தற்போது உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 73 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 34 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 12 இடங்களும் உள்ளன, இதில் குறிப்பிட்ட பின்னடைவுப் பணியிடங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.டெக், எம்.சி.ஏ., எம்.டெக் பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பிரிவில் இந்த படிப்புகளை படித்திருக்க வேண்டும். பி.ஏ,., பி.காம், பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிப்ரவரி 5-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.mnnit.ac.in/ என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : முதுநிலை நிர்வாக அதிகாரி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : முதுநிலை நிர்வாக அதிகாரி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019. ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணிகள் ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி மற்றும் முதுநிலை நிர்வாக அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சிறப்பு அதிகாரி (ஆபீசர்- ரெகுலர்) பணிக்கு 16 பேரும், சிறப்பு அதிகாரி (ஆபீசர் - காண்டிராக்ட்) பணிக்கு 11 பேரும், மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி (ரெகுலர்-காண்டிராக்ட்) பணிக்கு 31 பேரும், முதுநிலை நிர்வாக அதிகாரி (கிரெடிட் ரிவியூ) பணிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள் 11 பணியிடங்கள் உள்ள சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ, படிப்புடன் முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ரெகுலர் பிரிவு பணிக்கும், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் சி.ஏ. படித்தவர்கள் (ரெகுலர்-காண்டிராக்ட்) பணி மற்றும் முதுநிலை நிர்வாக அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 31 பணியிடங்கள் உள்ள பிரிவுக்கு 31-1-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற பணி களுக்கு பிப்ரவரி 11-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ‘யந்த்ரிக்’ பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019.

INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ‘யந்த்ரிக்’ பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-2-2019. கடலோர காவல்படையில் டிப்ளமோ என்ஜினீயா்கள் சேர்ப்பு கடலோர காவல் படையில் பயிற்சி யுடன் கூடிய ‘யந்த்ரிக்’ பணிக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது ‘யந்திரிக்/2-2019 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 3 வருட டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே... வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-8-1997 மற்றும் 31-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் (ரேடியோ/பவர்) பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். உடற்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 21-2-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். விரிவான விவரங்களை www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 155 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2019.

FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 155 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2019. கேரளாவில், திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (FACT) செயல்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 155 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெக்னீ சியன் பிரிவில் 57 இடங்களும், டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில் 98 இடங்களும் உள்ளன. இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் 1-1-2019-ந் தேதியில் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1995-ந் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கெமிக்கல், கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி, மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக் மோட்டார் வெகிகிள், பெயிண்டர், வெல்டர், கார்பெண்டர், சி.ஓ.பி.ஏ. போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., ஐ.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 23-1-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://fact.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019. மத்திய மின்சார நிறுவனம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஏராளமான பயிற்சிப்பணி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடுமுழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது இதன் கிளை நிறுவனங்களில் 2019-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்கிறது. போபால் கிளையில் 573 பேரை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 287 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 86 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 86 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 114 இடங்களும் உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியில் சேரலாம். 31-3-2019-ந் தேதியில் 14 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டு இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் https://ncvtmis.gov.in என்ற இணையதளம் சென்று தங்கள் பெயரை பதிவு செய்த பின்னர், அணுசக்தி நிறுவனத்தின் இணைய தளமான www.bhelbpl.co.in சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து பிப்ரவரி 10-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றைடயும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரத்தை மேற்குறிப்பிட்டுள்ள அணுசக்தி மைய இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவ வீரர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 55 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.02.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவ வீரர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 55 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.02.2019. ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 46-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி யானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர் காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி 7-ந் தேதியாகும். மேலும் இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சி உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 324 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019.

NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சி உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 324 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019. இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சயின்டிபிக் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டைபென்டியரி டிரெயினி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 324 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... கல்வித்தகுதி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.எஸ்சி. (வேதியியல்) படித்தவா்களுக்கு சயின்டிபிக் அசிஸ்ட்டன்ட் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பிளஸ்-2 படித்தவர்களுக்கும் ஸ்டைபென்டியரி டிரெயினியாக பணி புரியும் வாய்ப்பும் உள்ளது. வயது வரம்பு 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 31-1-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். ஒவ்வொரு பணிக்குமான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களைhttps://npcilcareers.co.inஎன்ற இணைய தளத்தில் பார்க் கலாம்.
Share:

INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமிஷன் ஆபீஸர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 102 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 1-2-2019.

INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமிஷன் ஆபீஸர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 102 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 1-2-2019. என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, கடல் எல்லையை பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. நாட்டுக்குச் சேவை செய்வதுடன், நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தரும் கடற்படை பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பலரும் கனவாக கொண்டுள்ளனர். கடற்படையும், தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது கமிஷன் ஆபீஸர் (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச்) ஜன - 2020 என்ற பயிற்சியில் சேர, பட்டதாரி என்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 102 பேர் இந்த பயிற்சி யில் சேர்க்கப்படுகிறார்கள். இவை சாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும், குறுகிய கால பணிவாய்ப் பாகும். இந்த பயிற்சியில் சேர விரும்பும், விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: 19½ முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1995 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: பி.இ., பி.டெக் துறை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் உள்பட குறிப்பிட்ட என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் இந்த படிப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். உடல்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் விண்ணப்பதாரர்கள் பார்வைத் திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இதற்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடை பெறும். இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது 14 ஆண்டுகள் பணிக் காலத்தைக் கொண்ட ஷாட் சர்வீஸ் கமிஷன் பணியாகும். அதற்கு பின்னர் விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் பணி நீடிப்பு பெற முடியும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்று களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது விண்ணப்பம் மற்றும் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். முக்கியத் தேதி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1-2-2019 மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 327 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 327 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019. மத்திய அரசு துறைகளில் உதவி பேராசிாியர் மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 358 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. எனப்படுகிறது. மத்திய அரசு துறைகளில் ஏற்படும் உயர் பதவிகளை இந்த அமைப்பு தேர்வு நடத்தி தகுதியானவர்களை பணியமர்த்துகிறது. தற்போது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 358 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மருத்துவ அதிகாரி (பொது) பணிக்கு மட்டும் 327 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ அதிகாரி (ஜெனரல் டியூட்டி) பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் மற்றும் பிற பணிகளில் அதிகபட்சம் 55 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.எஸ். படிப்புடன், குறிப்பிட்ட மருத்துவ பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி 31-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

MU RECRUITMENT 2019 | MU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Project Associate | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2019.

MU RECRUITMENT 2019 | MU அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Project Associate | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 02 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2019. சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை. சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 02 பதவி: Project Associate - 01 பதவி: Project Assistant - 02 தகுதி: Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் Project Associate பணிக்கும், Physics, Chemistry,Material Science, Nanoscience போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளம்: மாதம் ரூ. 20,000 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Professor S.Balakumar, Director, National Centre for Nanoscience and Nanotechnology, University Of Madras, Guindy Campus, Chennai 600 025. Email: baladuga@yahoo.com விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2019 மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://noc.unom.ac.in/webportal/uploads/appointments/CARS_20190110094804_59277.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share:

RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.

RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.

ரிசர்வ் வங்கியில் ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிக்கல்) பணிக்கு 24 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஜனவரி 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். பிப்ரவரி மாதத்தில் இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.rbi.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

TN COURT RECRUITMENT 2019 | TN COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2019.

TN COURT RECRUITMENT 2019 | TN COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2019.

பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிரைவர், ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 62 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள், 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கும் இரவு காவலாளி, சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

முழுமையான விவரங்களைhttps://districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் ஜனவரி 21-ந்தேதியாகும்.
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூ‌னியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூ‌னியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூ‌னியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி தொடர்பான டிப்ளமோ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 20-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

ITPOLICE RECRUITMENT 2019 | ITPOLICE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமாண்டன்ட் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.

ITPOLICE RECRUITMENT 2019 | ITPOLICE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமாண்டன்ட் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.

இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் (ஐ.டி.பி.பீ.) படைப்பிரிவில் கமாண்டன்ட் பணிக்கு என்ஜினீயரிங் படித்தவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை டெபுடேசன் (பதிலாள்) பணியிடங்களாகும்.

விண்ணப்பதாரர்கள் 52 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, தபால் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 2 மாதத்திற்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வெண்டும். இது பற்றிய விவரங்களை www.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

IOC RECRUITMENT 2019 | IOC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.

IOC RECRUITMENT 2019 | IOC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரா சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இது கிரேடு 4 தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 68 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரோக்கன், பவர் அண்ட் யூடிலிட்டி, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேசன் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரொடக்சன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பி.எஸ்.சி. அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக ஜனவரி 28-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 17-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை https://www.iocrefrecruit.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கடற்படையில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-1-2019.

INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கடற்படையில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-1-2019.

கடற்படையில் ‘பெட்டி ஆபீசர் ’ அதிகாரி பணிக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு படிப்புடன், விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெட்டி ஆபீசர் தரத்திலான அதிகாரி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்கும் செய்லர் (ஸ்போர்ட்ஸ் கோட்டா 1-2019 ) என்ட்ரி எனும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:
17 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர் 1-2-1997 மற்றும் 31-1-2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர். மற்றும் எம்.ஆர். பணியிடங்களுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் 1-4-1998 மற்றும் 31-1-2002 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
எம்.ஆர். பிரிவு பணியில் சேர 10-ம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.ஆர். மற்றும் பெட்டி ஆபீசர் என்ட்ரி பணியில் சேர பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தடகளம், நீர்விளையாட்டுகள், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, கபடி, ஹேண்ட்பால், பளுதூக்குதல், மல்யுத்தம், ஸ்குவாஸ், வாள்சண்டை, கோல்ப், டென்னிஸ், காய கிங், கனோயின், ரோயிங், சூட்டிங், செயிலிங், விண்ட் சர்பிங், ஹார்ஸ்போலோ போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் சர்வதேச அளவில் அல்லது தேசிய அளவில் சாதித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, விளையாட்டுத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

உடற்தகுதி :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
குறிப்பிட்ட மாதிரியான வடிவில் ஏ4 காகிதத்தில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள், புகைப்படங்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் பயிற்சி யின் பெயர், மதிப்பெண் சதவீதம் போன்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : THE SECRETARY, INDIAN NAVY SPORTS CONTROL BOARD, 7th Floor, Chankya Bhavan, INTEGRATED HEADQUAR TERS, M MoD (NAVY), NEW DELHI 110 021.

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 26-1-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

Share:

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 392 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-2-2019.

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 392 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 4-2-2019.
இந்திய ராணுவ அகாடமிகளில் 392 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (என்.டி.ஏ.&என்.ஏ.இ-1-2019) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 392 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.இதில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 342 பேரும் (தரைப்படை 208 பேர், கடற்படை - 42 பேர், விமானப்படை 92), இந்திய கடற்படை அகாடமியில் 50 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 2-7-2000, 1-7-2013 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். கடற்படை அகாடமி மற்றும் விமானப்படையில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 4-2-2019-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 21-4-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் விவரங்களை பார்க்க www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Share:

GRSE RECRUITMENT 2019 | GRSE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 200 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-1-2019.

GRSE RECRUITMENT 2019 | GRSE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 200 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-1-2019.
இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் கப்பல்கட்டும் தளங்களில் ஒன்று ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் (GRSE) லிமிடெட்’ நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப்பணியிடங்களுக்கு 200 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 135 இடங்களும், சமீபத்தில் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு (பிரஸ்ஸர்) 25 இடங்களும், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 14 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 26 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1-9-2019-ந் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், சமீபத்தில் ஐ.டி.ஐ. படித்திருப்பவர்கள் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பிற்கு பின்பு ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் 22-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விரிவான விவரங்களை http://grse.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Share:

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 309 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-1-2019.

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 309 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-1-2019.

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 131 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 31 இடங்களும், அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் உள்ளன. இவை தவிர இன்னும் 13 பிரிவுகளில் கணிசமான பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவில் தொழில்நுட்ப பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகளுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.370 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-1-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.ongcindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

Indian Coast Guard RECRUITMENT 2019 | Indian Coast Guard அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நேவிக் (ஜெனரல் டியூட்டி) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : .... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019

Indian Coast Guard RECRUITMENT 2019 | Indian Coast Guard அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நேவிக் (ஜெனரல் டியூட்டி) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ....  | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019
பிளஸ்-2 படித்தவர்கள் கடலோர காவல்படையில் சேர்ப்பு.கடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-8-1997 மற்றும் 31-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:
பிளஸ்-2 படிப்பை 10+2 முறையில் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களிலாவது 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.

உடல்தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் கொடுப்பது அவசியம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும்.

முக்கியத் தேதி:
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 31-1-2019. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
Share:

ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தமிழகத்தில் 9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-1-2019

ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தமிழகத்தில் 9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-1-2019 இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் சிறப்பு மருத்துவ அதிகாரி பணி தொழிலாளர்கள் நல காப்பீட்டு கழக நிறுவனத்தின் கீழ் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் தலைமையகத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 329 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தமிழகத்தில் 9 பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2019-ந் தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பணியிடங்கள் உள்ள மருத்துவ பிரிவுகளில் முதுநிலை படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கார்டியாலஜி, காஸ்ட்ரோஎன்ட் ராலஜி, நியூராலஜி, ஆங்காலஜி, யூராலஜி, அனஸ்தீசியா, பயோகெமிஸ்ட்ரி, டெர்மாலஜி, ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, பேதாலஜி, ரேடியோ டயக்னாசிஸ், சைக்கியாட்ரி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 24-1-2019-ந் தேதிக்குள் அந்தந்த மாநில மண்டல இ.எஸ்.ஐ. இயக்குனர் அலுவலக முகவரிக்கு சென்றடைய வேண்டும். தமிழக விண்ணப்பதாரர்கள் Regional Director, ESI Corporation, Panchdeep Bhawan, 143, Sterling Road, Chennai-600034. Tamil Nadu என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் அனுப்பலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.esic.nic.in என்ற முகவரியில் பார்க்கலாம்.
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : SUB-INSPECTOR OF FISHERIES | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | SUB-INSPECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE | பதவி : SUB-INSPECTOR OF FISHERIES  | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
0104/2019 10.01.201910.02.201904.05.2019 FN&ANAPPLY ONLINE
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Senior Technical Assistant, Junior Technical Assistant | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Senior Technical Assistant, Junior Technical Assistant | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 19 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2019.
0203/2019 07.01.201906.02.201920.04.2019    FN & ANAPPLY ONLINE
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER  | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019.
302/2019 02.01.201930.01.201927.04.2019 FN&ANAPPLY ONLINE
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Deputy Collector, DSP, Assistant Commissioner, District Registrar, District Employment Officer | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 139 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Deputy Collector, DSP, Assistant Commissioner, District Registrar, District Employment Officer | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 139  | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
0401/2019 03.01.201931.01.2019Preliminary Examination 03.03.2019 FNAPPLY ONLINE
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ASSISTANT AGRICULTURAL OFFICER | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 580 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ASSISTANT AGRICULTURAL OFFICER | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 580 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.
139/2018 27.12.201827.01.201907.04.2019 FN&ANAPPLY ONLINE
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : | INSPECTOR AND STORE KEEPER மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.01.2019

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | INSPECTOR OF SALT IN INDUSTRIES AND COMMERCE AND STORE KEEPER IN FORENSIC SCIENCES | பதவி : | INSPECTOR AND STORE KEEPER மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.01.2019 .
238/2018 19.12.201818.01.2019      24.03.2019       FN&ANAPPLY ONLINE
Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :உடற்பயிற்சி ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 06 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :உடற்பயிற்சி ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 06 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019. தமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வேண்டுமா? தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 06 பதவி: Hostel Superintendent -cum- Physical Training Officer - 06 சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. தகுதி: உடற்கல்வி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் தேர்வு கட்டணம் ரூ.150. ஒரு முறை பதிவு முன்பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_02_notifyn_Hostel_Superintendent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019
Share:

NPLINDIA RECRUITMENT 2019 | NPL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 03 | நேர்முகத் தேர்வு நடைபெறும் : 15.01.2019.

NPLINDIA RECRUITMENT 2019 | NPL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 03 | நேர்முகத் தேர்வு நடைபெறும் : 15.01.2019. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் நிர்வாகம் : தேசிய இயற்பியல்ஆய்வகம் மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட உதவியாளர் மொத்த காலிப் பணியிடம் : 03 கல்வித் தகுதி எம்.எஸ்சி. வேதியியல் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பி.இ. பாலிமர் இன்ஜினியரிங் பி.டெக். பாலிமர் டெக்னாலஜி பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் *http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf* வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் CSIR-National Physical Laboratory (NPL), Dr KS Krishnan Marg, Pusa, New Delhi - 110012 தேர்வு நடைபெறும் நாள் : 15.01.2019 அன்று காலை 09.00 மணி ஊதியம் : ரூ.25,000 🔰தேர்வு முறை நேர்முகத் தேர்வு இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nplindia.in/sites/default/files/Advertisement-No-Rectt-4-3-2018.pdf அல்லது www.nplindia.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்
Share:

Krishi Vigyan Kendra RECRUITMENT 2019 | Krishi Vigyan Kendra அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Subject Matter Specialist | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : - | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2019.

விவசாயம், கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை! அரியலூரில் செயல்பட்டு வரும் "Krishi Vigyan Kendra"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணி: Subject Matter Specialist(Animal Science) சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும் தகுதி: Veterinary Sciences, Animal Sciences துறையில் முதிகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் பணி: Programme Assistant(Farm Manager) சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும் தகுதி: விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "CREED Krishi Vigyan Kendra" என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, உதயநந்தம்(கோடு எண்.6719) மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுத்து அனுப்ப வேண்டும் விண்ணப்பிக்கும் முறை www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, ICAR-Krishi Vigyan Kendra (Hosted by CREED), Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District – 612 902, Tamil Nadu பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kvk.creed.co.in/pdf/Notification274.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
Share:

ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : SPECIALISTS GRADE II | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 72+257 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2019.

ESI RECRUITMENT 2019 | ESI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : SPECIALISTS GRADE II | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 72+257  | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2019.

Share:

CHENNAI - DEVENDRAN COAL INTERNATIONAL PRIVATE LIMITED அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : MARKETING EXECUTIVE AND OTHERS | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : MANY | விண்ணப்பிக்க கடைசி நாள் : APPLY SOON.

CHENNAI - DEVENDRAN COAL INTERNATIONAL PRIVATE LIMITED  RECRUITMENT 2019 | CHENNAI - DEVENDRAN COAL INTERNATIONAL PRIVATE LIMITED அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : MARKETING EXECUTIVE AND OTHERS | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : MANY  | விண்ணப்பிக்க கடைசி நாள் : APPLY SOON.

Share:

TNSAMB RECRUITMENT 2019 | TNSAMB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : PROGRAMME COORDINATOR AND OTHERS | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.

TNSAMB RECRUITMENT 2019 | TNSAMB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : PROGRAMME COORDINATOR AND OTHERS | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.

Share:

THIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2019 | THIRUVALLUVAR UNIVERSITY வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : VC | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2019.

THIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2019 | VELLORE THIRUVALLUVAR UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : VC | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2019.



Share:

TNPSC RECRUITMENT 2019 | TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : CURATOR| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : CURATOR| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2019. FROM 24.01.2019

Share:

CRPF RECRUITMENT 2019 | மத்திய ரிசர்வ் காவல் படையில்விளையாட்டு வீரர்கள் ஆள்சேர்ப்பு விளம்பரம். மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 359. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.

CRPF RECRUITMENT 2019 | மத்திய ரிசர்வ் காவல் படையில்விளையாட்டு வீரர்கள் ஆள்சேர்ப்பு விளம்பரம். | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 359. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.01.2019.

Share:

TNPSC தொகுதி - I பணியில் அடங்கிய 85 பதவிகளுக்கான நேர்காணல் | TNPSC - Oral Test for posts included in Group - I Services.

TNPSC - Oral Test for posts included in Group - I Services | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி வெளியீடு 2014 – 2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில தொகுதி - I பணியில் அடங்கிய 85 பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 09.11.2016 ஆம் நாளிட்ட அறிவிக்கை வெளியிடப்பட்டு முதல்நிலை எழுத்துத் தேர்வானது கடந்த 19.02.2017 அன்று முற்பகல் நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் கடந்த 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்ற முதன்மை எழுத்துத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்டனர். முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற 176 விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 31.12.2018 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் (முகவரி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வாணையச் சாலை (அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோட்டை இரயில் நிலையம் அருகில், சென்னை – 600 003) வரும் 21.01.2019 முதல் 25.01.2019 வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத்தேர்விற்கான குறிப்பாணையினை (NOTICE OF INTERVIEW) www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டது. நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும், முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது. செயலாளர்
Share:

BSF விளையாட்டு வீரர்களுக்கு பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.01.2019

விளையாட்டு வீரர்களுக்கு பணி மற்றொரு அறிவிப்பின்படி இதே படைப்பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 63 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
Share:

RBI ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.01.2019

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக பணிபுரிவது இளைஞர்கள் பலரின் கனவாகும். தற்போது ரிசர்வ் வங்கியில் ‘கிரேடு-சி’ தரத்திலான அதிகாரி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ. படித்தவர்கள், இது தொடர்பான முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., படித்து பணி அனுபவம் பெற்றவர்கள், பி.இ., பி.டெக், எம்.டெக். படித்தவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விண்ணப்பதாரர் 1-12-2018-ந் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.100 செலுத்தினால் போதுமானது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். JAN (8-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.rbi.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

தமிழகத்தில், 139 குரூப்-1 பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019

தமிழகத்தில், 139 குரூப்-1 பணிகள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி வாரியான காலியிட விவரம் : உதவி கலெக்டர் -27, டி.எஸ்.பி.-56, உதவி கமிஷனர் -11, துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை)- 13, மாவட்ட பதிவாளர்-7, உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி) - 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 8, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி -2. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந்தேதியில் 21 வயது பூர்த்தி அடைபவராகவும், 37 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி கமிஷனர் பணிக்கு மட்டும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமான ரூ.150 செலுத்த வேண்டியதில்லை. சில பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு வருகிற மார்ச் 3-ந் தேதி நடக்கிறது. முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் தேர்வுநாள் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnspc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Share:

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை | நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாள் : ஜனவரி 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை |துணை ராணுவ படைகளில் ஒன்று பி.எஸ்.எப். தற்போது இந்த படைப்பிரிவில் சிறப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிறப்பு மருத்துவர் பணிக்கு 18 இடங்களும், மருத்துவ அதிகாரி (பொது பணி) 59 இடங்களும், பல் மருத்துவர் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் பொது மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம், முதுநிலை மருத்துவ படிப்புடன், குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் சிறப்பு மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.டி.எஸ். படித்தவர்கள் பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 67 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் படித்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.
Share:

BHEL பெல் நிறுவனத்தில் 672 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2019

பெல் நிறுவனத்தில் 672 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடுமுழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது இதன் கிளை நிறுவனங்களில் 2019-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்கிறது. போபால் கிளையிலும், ஹரித்துவார் கிளையிலும் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. போபாலில் 229 பணியிடங்களும், ஹரித்து வாரில் 443 இடங்களும் உள்ளன. போபாலில் உள்ள பணியிடங்களில் டிப்ளமோ என்ஜினீயர்களும், பட்டதாரி என்ஜினீயர்களும் சேர்க்கப்படுகிறார்கள். பட்டதாரிகளுக்கு 138 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 91 இடங்களும் உள்ளன. 1-1-2019-ந் தேதியில் 14 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 21-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரத்தை https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஹரித்துவாரில் உள்ள பெல் கிளையில் 443 பேர் அப்ரண்டிஸ் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். டிரேடு அப்ரண்டிஸ் பணிகளான இவற்றில் 10-ம் வகுப்பு படிப்புடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேர்க்கப்படு கிறார்கள். விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக ஜனவரி 13-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரத்தை careers.bhelhwr.co.in/recruitment/main.html என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Share:

ALL POST

வேலை தேடும் இளைஞர்களுக்கான பொக்கிஷம் தங்களுக்கு பொருத்தமான பணியினை தேடிட இந்த இணையதளம் உங்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவிகரமாக இருக்கும் எனவே உங்களுக்கு பொருத்தமான பணியினை தேடி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.குறித்த நேரத்தில் தங்கள் விண்ணப்பத்தினை சார்ந்த நிறுவனத்திற்கு அளித்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சார்ந்த இணையதளத்தை பொறுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
    Share:

    RRB - ரெயில்வேயில் 14,033 பணிகள் | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019

    ரெயில்வே துறையில் ஜூனியர் என்ஜினீயர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 14 ஆயிரத்து 33 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு மட்டும் 13083 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெப்போ மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 456 இடங்களும், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் பணிக்கு 494 இடங்களும் உள்ளன.

    இந்த பணிகளுக்கு 1-1-2019-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் கெமிக்கல் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.rrcb.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
    Share:

    TNPSC - மாவட்ட கல்வி அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.01.2019

    பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்பவும், டி.என்.பி. எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்குப் பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றவர் களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. முதுநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து, பி.எட். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து பள்ளிக்கல்வி வரை படித்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 9-1-2019-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்.
    Share:

    TNPSC தமிழகத்தில் 580 உதவி வேளாண்மை அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019

    தமிழகத்தில் 580 உதவி வேளாண்மை அதிகாரி பணிகள் | தமிழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு 580 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    இது பற்றிய விவரம் வருமாறு:-
    தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தமிழக வேளாண்மைத் துறையில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 580 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எஸ்.டி. பிரிவினருக்கான 4 பின்னடைவுப் பணியிடங்களும் அடக்கம்.

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்...

    வயது வரம்பு
    விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., எம்.பி.சி./டி.சி., மற்றும் பி.சி., பி.சி.எம். மற்றும் விதவைப் பெண்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

    கல்வித்தகுதி
    விண்ணப்பதாரர்கள் மேல்நிலைக் கல்வியுடன் (பிளஸ்-2), வேளாண்மை டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.

    கட்டணம்
    விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பித் திருப்பவர்கள், தேர்வுக்கட்டணமாக ரூ.100 மட்டும் செலத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் முறை
    விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 27-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான தாள்-1, தாள்-2 தேர்வுகள் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற உள்ளது.விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
    Share:

    Popular Posts

    Search This Blog

    Labels

    @ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
    Back to TOP

    Get Latest Updates: Follow Us On WhatsApp

    Contact Form

    Name

    Email *

    Message *

    Labels

    Blog Archive

    Recent Posts

    Pages

    பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.