Ad Code

ரெயில்வேயில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு விரைவில் நியமிக்க முடிவு

மத்திய அரசு, ரெயில்வே துறையில் காலியாக உள்ள 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப முடிவு செய்துள்ளது.

பணியிட விவரங்கள்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும், 51 பிரிவுகளில் மொத்தம் 6,374 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பை ரெயில்வே துறை விரைவில் வெளியிட உள்ளது.

தேர்வு நடைமுறை:

காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடர்பாக, பெங்களூருவில் உள்ள ரெயில்வே தேர்வு வாரியத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. 51 பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை அனைத்து மண்டலங்களும் சரிபார்த்து, ஆன்லைன் முறையில் பதிவேற்ற வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வரவேற்பு:

ரெயில்வே துறையின் இந்த நடவடிக்கையை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பராமரிப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது ரெயில்வே துறையின் பாதுகாப்புக்கு சரியான நடவடிக்கை என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு உள்ள பணிச்சுமையைக் குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், ரெயில்வே துறையில் இதைவிட அதிக காலியிடங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code