மத்திய அரசின் செம்பு தாது (தாமிரம்) நிறுவனம் எச்.சி.எல். என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அட்டண்ட் கம் ஜூனியர் டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், மற்றும் பி.எஸ்சி. பாடங்களில் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு டிசம்பர் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மற்றொரு அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் பட்டதாரிகளை பயிற்சிப் பணியிடங்களுக்கு நியமிக்கிறார்கள். மொத்தம் 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு டிசம்பர் 1-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய கூடுதல் விவரங்களை https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment