Ad Code

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.

  • NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
  • இணைய முகவரி : https://www.nabard.org/
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் அதிகாரி (கிரேடு-ஏ) பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை உதவி மேலாளர் தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சட்டம் மற்றும் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களாக இருக்க வேண்டும். ராஜ்பாஷா பணியிடத்திற்கு முதுநிலை மொழிபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 1-1-2020-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.150 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

வரும் பிப்ரவரி 3-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.



Post a Comment

0 Comments

Comments

Ad Code