- சென்னையில் நாளை (31.01.2020) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
- சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் கிண்டி ஆலந்தூர் சாலை யில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளா கத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
- இதில், 35 வயதுக்குட் பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐடிஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, நர்சிங் ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
- இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இச்சேவைக்கு கட்ட ணம் இல்லை.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்கு நர் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.
Home »
வேலைவாய்ப்பு முகாம்
» தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
No comments:
Post a Comment