NAVY RECRUITMENT 2019 |
NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : கமிஷன் ஆபீஸர் உள்ளிட்ட பயிற்சி பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 53 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.04.2019.
இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அதிகாரி பணி
என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, கடல் எல்லையை பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. நாட்டுக்குச் சேவை செய்வதுடன், நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தரும் கடற்படை பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பலரும் கனவாக கொண்டுள்ளனர். கடற்படையும், தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்த்து வருகிறது.
தற்போது கமிஷன் ஆபீஸர் (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் எஜுகேசன் பிராஞ்ச், டெக்னிக்கல் பிராஞ்ச்) ஜன - 2020 என்ற பயிற்சியில் சேர, பட்டதாரி என்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதில் சேர விண்ணப்பிக்கலாம். சில பணியிடங்களில் பெண்களுக்கும் வாய்ப்பு உள்ளது. மொத்தம் 53 பேர் இந்த பயிற்சி சேர்க்கையில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த பயிற்சியில் சேர விரும்பும், விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 19½ முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1996 மற்றும் 1-1-2001 ஆகிய தேதி களுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பி.இ., பி.டெக் துறை பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் விண்ணப்பதாரர்கள் பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இதற்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும்.
இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவத் தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது 14 ஆண்டுகள் பணிக் காலத்தைக் கொண்ட ஷாட் சர்வீஸ் கமிஷன் பணியாகும். அதற்கு பின்னர் விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் பணி நீடிப்பு பெற முடியும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். தேர்வுகளுக்கு அழைக்கப்படும்போது விண்ணப்பம் மற்றும் சான்றுகள் எடுத்துச் செல்ல வேண்டும்.
முக்கியத் தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 5-4-2019 மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Home »
INDIAN NAVY JOB
» NAVY RECRUITMENT 2019 | NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமிஷன் ஆபீஸர் உள்ளிட்ட பயிற்சி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 53 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.04.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
No comments:
Post a Comment