- BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : திறன் சார்ந்த பணியாளர் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4000 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.01.2020.
- இணைய முகவரி : www.beciljobs.com
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மத்திய அரசின் இந்திய ஒளிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனம் சுருக்கமாக பி.இ.சி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தல் திறன் சார்ந்த பணியாளர்கள், திறன் சாராத பணியாளர்களை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்த்து பயிற்சியளிக்கும் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. உத்தேசமாக 4 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் ஜனவரி 11-ந் தேதியாகும். 3 பேட்ஜ்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. ஜனவரி 11, 15, 20 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி நடக்கிறது. விரைந்து பதிவு செய்பவர்களின் முன்னுரிமை அடிப்படையில் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். பிப்ரவரி 1-ந்தேதி முதல் பணிக்காலம் தொடங்குகிறது.
இது பற்றிய விவரங்களை www.beciljobs.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment