Ad Code

அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

  • இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமாக திகழ்கிறது தேசிய அனல்மின் நிறுவனம் (என்.டி.பி.சி.). மொத்தம் 55 ஆயிரத்து 786 மெகாவாட் திறன் கொண்டது. 
  • இது நாட்டின் மின் தேவையில் நான்கில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது. 
  • 2032-ம் ஆண்டிற்குள் 130 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் மின் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இது 14-வது இடம் வகிக்கிறது. 
  • தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர்கள் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
  • மொத்தம் 203 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 76 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 26 பேரும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 26 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 
  • இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 102 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 30 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 15 இடங்களும் உள்ளன. 
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள், அவை சார்ந்த பாடப்பிரிவுகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
  • 3 ஆண்டு பணி அனுபவம் அவசியமாகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 
  • இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 26-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code