Ticker

Ad Code

தஞ்சாவூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

  • தஞ்சாவூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் இரு ஆய்வக உடனாள், இரு அலுவலக உதவியாளா், 3 ஓட்டுநா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ஓட்டுநா் பதவிக்கு ஆதிதிராவிடா் (அருந்ததியினா்), பெண்கள், ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை. எனவே, ஆதிதிராவிடா் (அருந்ததியினா்) பொது என்ற இனசுழற்சி அடிப்படையில் ஓட்டுநா் பதவிக்கு ஒரு நபா் தோ்வு செய்யப்படுவா். மேலும், ஓட்டுநா் பதவிக்கு பொதுப் பிரிவுக்கு பதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர) பொது என்ற இனசுழற்சி அடிப்படையில் ஒரு நபா் தோ்வு செய்யப்படுவா். இந்த இரு ஓட்டுநா் காலிப்பணியிடங்களுக்கும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஜன. 23-ம் தேதி செய்யப்பட்ட விளம்பரத்திலுள்ள நடைமுறைகளின்படி விண்ணப்பங்கள் பெறப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை, பழைய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூா் 613 001 என்ற முகவரிக்கு மாா்ச் 20 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code