Ad Code

TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும்  ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
  • பதவி : துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்   உள்ளிட்ட பணி .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 20.01.2020.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2020.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 05.04.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 20 முதல் ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்டப் பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 8 வகையான உயர் பதவிகளை நேரடியாக நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான வருடாந் திரத் தேர்வு கால அட்டவணை யில், குரூப்-1 தேர்வு ஒரே ஆண்டுக் குகள் நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2020-ம் ஆண் டுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என்றும் இத்தேர்வுக்கு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜனவரி 20-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். காலியிடங்கள் குறித்த விவரமும் அப்போது வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code