ஒவ்வொரு பணிக்கும் என்னென்ன கல்வித்தகுதி, வயது வரம்புடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். வயது வரம்பு தளர்வு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்களை https://iccr.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 8-ந் தேதியாகும்.
-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
ICCR RECRUITMENT 2019 | ICCR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
ஒவ்வொரு பணிக்கும் என்னென்ன கல்வித்தகுதி, வயது வரம்புடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். வயது வரம்பு தளர்வு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்களை https://iccr.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 8-ந் தேதியாகும்.
SAC RECRUITMENT 2019 | SAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர், என்ஜினீயர் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.sac.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
TANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 900 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்கலாம்.
கல்வித்தகுதி
எலக்ட்ரீசியன், வயர்மேன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் என்.டி.ஏ., என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்
முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆகியோர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப் படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுகள் நடைபெறும் நாள் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு நாளை (மார்ச் 24) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 23-ந் தேதியாகும். தேர்வுக் கட்டணம் வங்கியில் செலுத்த ஏப்ரல் 28-ந் தேதி கடைசிநாளாகும்.
விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.tangedco.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
TN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.
- TN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவியாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1383 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.
- இணைய முகவரி : www.slmdrb.in
இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சில மாவட்ட பணியிடங்கள் பற்றி பார்த்தோம். இங்கு மேலும் சில மாவட்டங்களில் வாரியான பணியிட விவரம்:
சேலம் - 166, தர்மபுரி - 119, திண்டுக்கல்-111, கன்னியாகுமரி- 40, அரியலூர் -25, பெரம்பலூர்- 28, சிவகங்கை -37, தேனி -20, மதுரை -136, தூத்துக்குடி -96, திருச்சி -181, திருநெல்வேலி - 70, திருவண்ணாமலை -127, விழுப்புரம் -108, விருதுநகர் -119. மொத்தம் -1383 பணியிடங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
கல்வித் தகுதி
பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் :
விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஒருசில மாவட்ட கூட்டுறவு வங்கி பணிகளுக்கு ஏற்கனவே கடந்த 2019, ஆகஸ்டு, செப்டம்பர் காலங்களில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
சேலம் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.slmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு பணிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி மாறுபடுகிறது. அதிகபட்சமாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏப்ரல் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.‘
இதுபற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி இணையதள பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
கப்பல் தள நிறுவனத்தில், டிசைனர், ஜூனியர் சூப்பிரவைசர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் பயர் இன்ஸ்பெக்டர் பணி
10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் அனைவருக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை https://www.hslvizag.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர்
இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுருக்கமாக டி.என்.பி.சி.பி. (TNPCB) எனப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர், உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 242 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
உதவி என்ஜினீயர் பணிக்கு 78 இடங்களும், என்விரான்மென்டல் சயின்டிஸ்ட் பணிக்கு 70 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 38 இடங்களும், டைப்பிஸ்ட் பணிக்கு 56 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 12-2-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
சிவில், கெமிக்கல், என்விரான்மென்டல் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்புடன் முதுநிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோர் ரூ.250-ம், மற்றவர்கள் ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 26-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.tnpcb.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
- BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
- இணைய முகவரி : http://www.bhel.com/
பிட்டர், வெல்டர், மெக்கானிக், உள்பட பல பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.bhel.com/ இணையதளத்தில் பார்த்துவிட்டு மார்ச் 20-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- இணைய முகவரி : www.drdo.gov.in
மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோ ஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பட்டதாரி பயிற்சி பணிகளுக்கும், டிப்ளமோ படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள், அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.
இது பற்றிய அறிவிப்பு மார்ச் 7-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை www.drdo.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...
28-2-2020-ந் தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்ற இணைய பக்கத்தின் வழியாக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, பின்னர் இஸ்கோ ஸ்டீல் பிளான்ட் நிறுவன https://sail.co.in/iisco-steel-plant/about-iisco-steel-plant இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 17-ந் தேதியாகும்.
செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிகள்
- பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ‘செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா’ செயல்படுகிறது. சுருக்கமாக செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
பொது, சட்டம், ஐ.டி., பொறியியல், ஆராய்ச்சி, மொழி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக பொது பிரிவில் 80 இடங்களும், சட்டப் பிரிவில் 34 இடங்களும், ஐ.டி. பிரிவில் 22 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 29-2-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
சி.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பொது பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம், எம்.சி.ஏ., சிவில், எலக்ட்ரிக்கல், என் ஜினீயரிங் படித்தவர்கள் இவை சார்ந்த பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், மொழி மற்றும் ஆராய்ச்சி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும், மற்றவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 23-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இதற்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 12-ந் தேதியும், இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு, மே 3-ந் தேதியும் நடத்தப்படுகிறது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கவும், இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sebi.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
மத்திய அரசு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள்
- ரெயில் என்ஜின் நிறுவனம், உருக்கு நிறுவனம், ராணுவ நிறுவனம் போன்றவற்றில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்...
ரெயில் என்ஜின் நிறுவனம்
மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படுகிறது ‘டீசல் லோகோ மாடனிசேசன் ஒர்க்ஸ்’. ரெயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனமான இது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் செயல்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு பணி வாய்ப்பு என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு படித்தவர்கள் வெல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வெல்டர் பணிக்கு 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஏப்ரல் 20-ந்தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் மே அல்லது ஜூன் மாதம் முதல் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.
இது பற்றிய விவரத்தை https://dmw.indianrailways.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 469 பணியிடங்கள்
இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 133 பணியிடங்களும், இந்த மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பல்வேறு நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 113 இடங்களும் நிரப்பப் படுகின்றன.
மேலும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 62 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 64 இடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 97 இடங்களும் நிரப்பப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப் படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
கல்வித் தகுதி
பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் :
விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
காஞ்சீபுரம் மாவட்ட பணி களுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.kpmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல நாமக்கல் மாவட்டத்திற்கு மார்ச் 31-ந் தேதிக்குள்ளும், திருப்பூர் மாவட்ட பணிகளுக்கு ஏப்ரல் 6-ந் தேதிக்குள்ளும், கடலூர் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
NLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
- NLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 315 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
- இணைய முகவரி : www.nlcindia.com
இது பற்றிய விவரம் வருமாறு:-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங், ஜியாலஜி, நிதி, எச்.ஆர். போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மெக்கானிக்கல் பிரிவில் மட்டும் 125 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 இடங்களும் உள்ளன.
பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஜியாலஜி, நிதி, சி.ஏ., சி.எம்.ஏ., முதுநிலை படிப்புடன் எச்.ஆர். டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 1-3-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.854 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.354 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 18-ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 17-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இதற்கான தேர்வு மே 26, 27-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி இண்டஸ்ட்ரியல் டிரெயினி (நிதி) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு சி.ஏ., ஐ.சி.ஏ.ம்.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26-ந் தேதியாகும்.
இது பற்றிய விவரங்களையும் மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
- தஞ்சாவூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் இரு ஆய்வக உடனாள், இரு அலுவலக உதவியாளா், 3 ஓட்டுநா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
ஓட்டுநா் பதவிக்கு ஆதிதிராவிடா் (அருந்ததியினா்), பெண்கள், ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை. எனவே, ஆதிதிராவிடா் (அருந்ததியினா்) பொது என்ற இனசுழற்சி அடிப்படையில் ஓட்டுநா் பதவிக்கு ஒரு நபா் தோ்வு செய்யப்படுவா். மேலும், ஓட்டுநா் பதவிக்கு பொதுப் பிரிவுக்கு பதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர) பொது என்ற இனசுழற்சி அடிப்படையில் ஒரு நபா் தோ்வு செய்யப்படுவா். இந்த இரு ஓட்டுநா் காலிப்பணியிடங்களுக்கும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஜன. 23-ம் தேதி செய்யப்பட்ட விளம்பரத்திலுள்ள நடைமுறைகளின்படி விண்ணப்பங்கள் பெறப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை, பழைய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூா் 613 001 என்ற முகவரிக்கு மாா்ச் 20 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவியாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
- எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
- இணைய முகவரி : http://www.cuddrb.in
மொத்த காலியிடங்கள்: 64
Assistant In Cooperative Institutions In Cuddalore District (Other Than Cuddalore District Central Cooperative Bank)
பணி: Assistant - 20
Assistant In Cuddalore District Central Cooperative Bank
பணி: Assistant - 44
தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.14,000 - ரூ.47,500
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.cuddrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cuddrb.in/doc_pdf/Notification_2.pdf எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2020
BSF RECRUITMENT 2020 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
- BSF RECRUITMENT 2020 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எல்லைப் பாதுகாப்புப் படை சுருக்கமாக பி.எஸ்.எப். (BSF) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவின் புதுடெல்லி தலைமை பொது இயக்குனரகத்தில் இருந்து ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள், மெக்கானிக், ஏ.சி.டெக்னீசியன், பிளம்பர் உள்ளிட்ட குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக ஹெட்கான்ஸ்டபிள் (மாஸ்டர்) பணிக்கு 56 இடங்களும், ஹெட்கான்ஸ்டபிள் (என்ஜின் டிரைவர்) பணிக்கு 68 இடங்களும் உள்ளன. கான்ஸ்டபிள் தரத்திலான குரூவ் பணிக்கு 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணிகளுக்கு 22 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 20 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பட்டதாரி என்ஜினீயரிங் படித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ஒர்க்சாப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) படித்தவர்கள் ஹெட்கான்ஸ்டபிள் மற்றும், கான்ஸ்டபிள் தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பணிசார்ந்த பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்
சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணி களுக்கு ரூ.200-ம், இதர பணிகளுக்கு ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 16-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள், கட்டண டி.டி. ஆகியவை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in, www.bsf.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
SSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
- SSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.
ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 1355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. பல பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆபரேட்டர், லைபிரரி கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்களுக்கு லேப் அசிஸ்டன்ட், பமிகேசன் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) ஜூன் மாதம் 10,11,12-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
NIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.
- NIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தின் பல்வேறு கிளைகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 76 இடங்களும், சூரத் என்.ஐ.டி.யில் 73 இடங்களும், அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 58 இடங்களும், மேகலாயாவில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 30 இடங்களும் நிரப்பப்படுகிறது.
ஸ்ரீநகர்
என்.ஐ.டி.யின் ஸ்ரீநகர் கிளையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, மெக்கானிகல், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ், கெமிஸ்ட்ரி, ஹியூமனிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ், மேத்தமேடிக்ஸ் போன்ற துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
உதவி பேராசிரியர் பணிக்கு 59 இடங்களும், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 13 இடங்கள், பேராசிரியர் பணிக்கு 4 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துறையிலும் உள்ள பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
மேற்கண்ட துறை சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் www.nitsri.ac.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
சூரத்
சர்தார் வல்லபாய் என்.ஐ.டி. சூரத்தில் செயல்படுகிறது. இங்கு உதவி பேராசிரியர் பணிக்கு 73 இடங்கள் நிரப்பப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 17 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 14 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 8 இடங்களும் உள்ளன.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், அப்ளைடு மேத்தமேடிக்ஸ, அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
இது சார்ந்த பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 2-ந் தேதியாகும்.
இது பற்றிய விவரங்களை www.svnit.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
அகர்தலா
அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் (கிரேடு-1, கிரேடு-2) பணிக்கு 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோ என்ஜினீயரிங், கணிதவியல், இயற்பியல், ஹியூமனிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ் உள்பட 14 பாடத்துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
இவை சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் படிப்புகள் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் http://www.nita.ac.in/ என்ற இணைய தளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 25-ந் தேதி (நாளை) கடைசி நாளாகும்.
மேகாலயா
மேகாலயா என்.ஐ.டி. கிளையில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேபரேட்டரி அட்டன்ட் போன்ற பணிகளுக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி.ஐ, பிளஸ்-2, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ந் தேதி கடைசி நாளாகும்.
இது பற்றிய விவரங்களை http://nitmeghalaya.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
NESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2020.
- NESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2020.
நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம் போன்ற பல்வேறு இடங்களில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த இடங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த, 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். இன்று (24-ந்தேதி) முதல் மார்ச் 11-ந்தேதி வரை நேர்காணல் நடக்கிறது.
எந்த நாளில், எந்த இடத்தில் உள்ள பணிகளுக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.nesac.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
RBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.
- RBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உள்ளிட்ட பணி .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.
குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் மும்பை ரிசர்வ் வங்கி மண்டல முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 13-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். இது பற்றிய விவரங்களை https://rbidocs.rbi.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
AIIMS RECRUITMENT 2020 | அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.04.2020.
- AIIMS RECRUITMENT 2020 | அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.04.2020.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் மருத்துவமனை- கல்லூரி செயல்படுகிறது.
தற்போது ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 164 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பயோகெமிஸ்ட்ரி, பிஸியாலஜி, அனட்டாமி, பார்மகாலஜி, கம்யூனிட்டி மெட், பார்ம் மெட், பாரன்சிக் மெட், டாக்சிகாலஜி, மைக்ரோ பயாலஜி, சைக்கியாட்ரி, பேதாலஜி, அனஸ்திசியாலஜி, ஜென் மெடிசின், பீடியாட்ரிக்ஸ், ஆர்தோபெடிக்ஸ், இ.என்.டி., ஜெனரல் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்கள் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகள், முனைவர் ஆராய்ச்சி படிப்புகள் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அது பற்றிய விவரங்களையும் முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsrishikesh.edu.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
INDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 .
- INDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 .
முதுநிலை படிப்புடன், பணி சார்ந்த 2 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-2-2020 தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் மார்ச் 16-ந் தேதியாகும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianmuseumkolkata.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
- TNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவி பொறியாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
- இணைய முகவரி : www.tangedco.gov.in
மின்சார வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாளாகும். தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் மின்னியல்-400, இயந்திரவியல்-125, கட்டடவியல்-75 என மொத்தம் 600 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எனினும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். கல்வித் தகுதியாக பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், 10, 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
BIS RECRUITMENT 2020 | BIS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
- BIS RECRUITMENT 2020 | BIS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
‘பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் ((BIS)’ என்பது இந்திய தர நிர்ணய நிறுவனமாகும். இந்திய தயாரிப்பு பொருட்களின் எடை மற்றும் தரத்தை உறுதி மற்றும் ஆய்வு செய்யும் அமைப்பாக இது விளங்குகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்சியாளர் (கிரேடு-பி) பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் கேட் தேர்வு அடிப்படையில் என்ஜினீயரிங்- தொழில்நுட்ப பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகாம், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புட் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், பயோடெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பயோ மெடிக்கல் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-3-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி :
பி.இ., பி.டெக் படிப்புடன் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளுக்கான கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இவர்களைத் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 31-ந் தேதியில் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bis.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
NCLCIL RECRUITMENT 2020 | NCLCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2020.
- NCLCIL RECRUITMENT 2020 | NCLCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ‘நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்’. வடக்கு பிராந்திய நிலக்கரி நிறுவனங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது டிராக்லைன் ஆபரேட்டர், டோஸர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 307 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக டம்பர் ஆபரேட்டர் பணிக்கு 167 இடங்களும், டோஸர் ஆபரேட்டர் பணிக்கு 48 இடங்களும், ஷவல் ஆபரேட்டர் பணிக்கு 28 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 30-3-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்கள் டிராக்லைன் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிரைவிங் லைசென்சு அவசியம்.
கட்டணம் :
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் ஆகியோர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், துறை பணியாளர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://nclcil.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
CIPET RECRUITMENT 2020 | CIPET அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
- CIPET RECRUITMENT 2020 | CIPET அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில் நுட்ப மையம் மத்திய கல்வி- ஆராய்ச்சி நிறுவனமாகும். தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 241 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விரிவுரையாளர் பணிக்கு 46 இடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 90 இடங்களும், பகல்டி ஆசிரியர் பணிக்கு 60 இடங்களும் உள்ளன. இவை தவிர நூலகர், கஸ்டமர் ரிலேசன்சிப் ஆபீசர், உதவி பிளேஸ்மென்ட் ஆபீசர், லைபிரரி இன்ஸ்ட்ரக்டர், பிசிகல் டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...
வயது வரம்பு :
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பகல்டி மற்றும் விரிவுரையாளர் பணிக்கு 65 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளேஸ்மென்ட் அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி :
பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., லைபிரரி சயின்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணி உள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படித்து பணி அனுபவம் உள்ளவர்களுக்கு பகல்டி பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 20-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cipet.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
INDIAN ARMY RECRUITMENT 2020 | INDIAN ARMY அறிவித்துள்ள ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு.
- INDIAN ARMY RECRUITMENT 2020 | INDIAN ARMY அறிவித்துள்ள ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த ஈரோடு, தேனி, மதுரை, தி்ண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் நேரடியாக பங்கேற்கலாம். பல்வேறு பிரிவுகளில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
8,10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க முடியும். அவர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். கல்விச் சான்றுகள் மற்றும் அவசியமான சான்றுகளுடன் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
இதற்காக இணையதளம் வழியாக பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச் 21-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 19-ந்தேதி வரை இந்த பெயர்ப்பதிவு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் நாளில் நேரில் சென்று, திறன்களை நிரூபித்து ராணுவ வீரராகலாம். உடல்திறன் சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
HURL RECRUITMENT 2020 | இந்துஸ்தான் உர்வராக் ரசாயன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2020.
- HURL RECRUITMENT 2020 | இந்துஸ்தான் உர்வராக் ரசாயன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2020.
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் பி.இ., பி.டெக் படித்து கேட் 2019-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://hurl.net.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
GAIL RECRUITMENT 2020 | இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.03.2020.
- GAIL RECRUITMENT 2020 | இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.03.2020.
கெமிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை சார்ந்த என்ஜினீயரிங், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள், கேட் 2020 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://gailonline.com/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 12-ந் தேதியாகும்.
DFCCIL RECRUITMENT 2020 | DFCCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.01.2020.
- DFCCIL RECRUITMENT 2020 | DFCCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.01.2020.
தற்போது இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர், இளநிலை மேலாளர், நிர்வாக அதிகாரி போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். சி.ஏ., சி.எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக், பி.இ.பிடெக், எம்.பி.ஏ. பிஜி.டி.பி.எம்., எச்.ஆர். போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை www.dfccil.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
JAIPUR METRO RECRUITMENT 2020 | JAIPUR METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.
- JAIPUR METRO RECRUITMENT 2020 | JAIPUR METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.
அதிகபட்சம் 41 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான விரிவான விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். என்ஜினீயரிங் பட்டதாரிகள், இதர இளநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://transport.rajasthan.gov.in/jmrc என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 13-ந் தேதியாகும்.
TNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
- TNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
- இணைய முகவரி : www.tnpcb.gov.in
- விரிவான விவரங்கள் | Download
அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி
- அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெற அரசு அழைப்பு சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
- அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவை யான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந் தோறும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வபயிலும் வட்டங்கள் செயல்பட்டு வரு கின்றன.
- இங்கு டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இப்பயிற்சி வகுப்புகளில் தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகை கள் ஆகியவை பராமரிக்கப் படுவதுடன், மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவை யும் இலவசமாக நடத்தப்படு கின்றன.
- தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவர் களும், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர் களும் பயன்பெறுவதற்காக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (http://tamilnaducareerservices.tn.gov.in) செயல்பட்டு வருகிறது.
- இந்த இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப் -7பி, 8, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான குறிப்பு கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், இப்பாடக் குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
- இந்த வலைதளத்தை செல் போன் மூலமாகப் பயன்படுத் துவதற்காக ஒரு செல்போன் செய லியும் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (http://tamilnaducareerservices.tn.gov.in) தர விறக்கம் செய்து தமது செல் போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக் குறிப்புகளைத் தத்தமது செல்பேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க முடியும்.
- எனவே, அரசுத் துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் இந்த இணைய தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து இந்த வலைதளத் தின் சேவைகளை இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- சென்னையில் நாளை (31.01.2020) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
- சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் கிண்டி ஆலந்தூர் சாலை யில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளா கத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
- இதில், 35 வயதுக்குட் பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐடிஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, நர்சிங் ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
- இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இச்சேவைக்கு கட்ட ணம் இல்லை.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்கு நர் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.
CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.02.2020.
- CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மேனேஜர், புராஜெக்ட் ஆபீசர், புராஜெக்ட் சப்போர்ட் ஸ்டாப் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 143 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.02.2020.
- இணைய முகவரி : https://cdac.in/
இதில் அதிகபட்சமாக புராஜெக்ட் என்ஜினீயர் (சாப்ட் வேர் டிசைன், அண்ட் டெவலப்பர்) 80 இடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பி.இ., பி.டெக் பட்டதாரிகள், எம்.சி.ஏ., எம்.டெக், எம்.இ. முதுநிலை பட்டதாரிகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகாரி தரத்திலான பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயதுடையவர்களும், அலுவலர் பணியிடங்களுக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.
வருகிற 30-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. எந்த நாளில் எந்தெந்த பணிக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேரில் செல்ல வேண்டும்.
இது பற்றிய விவரங்களை https://cdac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT 2019 | DR AMBEDKAR LAW UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
- DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT 2019 | DR AMBEDKAR LAW UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி நூலகர், உதவி உடற்கல்வி இயக்குனர்.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
- இணைய முகவரி : www.tndalu.ac.in
பணியிடங்கள் சார்ந்த முதுநிலை படிப்பு, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது, இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
MOTHER THERESA UNIVERSITY RECRUITMENT 2019 | MOTHER THERESA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
- MOTHER THERESA UNIVERSITY RECRUITMENT 2019 | MOTHER THERESA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
- இணைய முகவரி : https://www.motherteresawomenuniv.ac.in/
வேதியியல், இயற்பியல், கணிதவியல், ஹோம் சயின்ஸ், ஆங்கிலம், உமன்ஸ் ஸ்டடிஸ், வணிகவியல், மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களை https://www.motherteresawomenuniv.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 7-ந் தேதியாகும்.
NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
- NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
- இணைய முகவரி : https://www.nabard.org/
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சட்டம் மற்றும் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களாக இருக்க வேண்டும். ராஜ்பாஷா பணியிடத்திற்கு முதுநிலை மொழிபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் 1-1-2020-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.150 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
வரும் பிப்ரவரி 3-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-2-2020
- INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-2-2020
- இணைய முகவரி : http://joinindiancoastguard.gov.in/
இது பற்றிய விவரம் வருமாறு:-
‘இந்தியன் கோஸ்ட் கார்டு’ எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப்படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி பணியான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு ஆட்சேர்க்கை நுழைவாகும்.
இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதர தகுதி விவரங்கனை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-7-1990 மற்றும் 30-6-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ெஜனரல் டியூட்டி பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து, பட்டப் படிப்பை முடித்தவர்கள், பைலட் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-2-2020-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
- INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : சிறப்பு அதிகாரி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 138 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
- இணைய முகவரி : www.indianbank.in
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு 20 முதல் 30 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 25 முதல் 35 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 27 முதல் 37 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எப்.ஏ., எல்.எல்.பி. மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 8-ந் தேதி நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianbank.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் தேர்வு
தமிழக அரசு மருத்துவமனை களில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்று விக்கப்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக தமிழக சுகாதாரத் துறைக்கு என கடந்த 2012ம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தொடங் கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 30 ஆயிரம் பேர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர் வாணையம் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளி யிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், உதவி டாக்டர்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரி (சித்தா) தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாத மும், உதவி மருத்துவ அதிகாரி (ஓமியோபதி, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மார்ச் மாதமும் வெளியிடப்படும்.
உதவி சிறப்பு டாக்டர் அறிவிப்பு மே மாதமும், லேப் டெக்னீசி யன் கிரேடு-2 அறிவிப்பு ஏப்ரம் மாதமும், இசிஜி டெக்னீசியன் அறிவிப்பு செப்டம்பர் மாதமும், உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் அக்குபேஷனல் தெரப்பிஸ்ட் அறிவிப்பு அக்டோபர் மாதமும், மருந்தாளுநர் அறிவிப்பு நவம்பர் மாதமும் வெளியாகவுள்ளது.
அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களில் எழுத்து தேர்வு மற் றும் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “2020-ம் ஆண்டில் 2 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் 3 ஆயிரம் பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்” என்றனர்.
சென்னையில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணி .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2020.
- இணைய முகவரி : www.upsc.gov.in
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல் படுகிறது. தற்போது தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அமலாக்க அதிகாரி/கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப இந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 421 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
இளநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
கட்டணம்:
பொதுப்பிரிவினர் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்www.upsconline.nic.in, www.upsc.gov.in ஆகிய இணையதள பக்கத்தைப் பார்க்க லாம்.
NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : பெட்டி ஆபீசர்’ அதிகாரி உள்ளிட்ட பணி .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-1-2020.
- இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெட்டி ஆபீசர் தரத்திலான அதிகாரி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்கும் செய்லர் (ஸ்போர்ட்ஸ் கோட்டா 1-2020 ) என்ட்ரி எனும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
17 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-4-1998 மற்றும் 31-1-2003 ஆகிய இரு தேதி களுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர். மற்றும் எம்.ஆர். பணியிடங்களுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி:
எம்.ஆர். பிரிவு பணியில் சேர 10-ம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.ஆர். மற்றும் பெட்டி ஆபீசர் என்ட்ரி பணியில் சேர பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தடகளம், நீர்விளையாட்டுகள், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, கபடி, ஹேண்ட்பால், பளுதூக்குதல், மல்யுத்தம், ஸ்குவாஸ், வாள்சண்டை, கோல்ப், டென்னிஸ், ரோயிங், சூட்டிங், செயிலிங், விண்ட் சர்பிங், ஹார்ஸ் போலோ போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் சர்வதேச அளவில் அல்லது தேசிய அளவில் சாதித்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, விளையாட்டுத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
உடற்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
குறிப்பிட்ட மாதிரியான வடிவில் ஏ4 காகிதத்தில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள், புகைப்படங்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் பயிற்சியின் பெயர், மதிப்பெண் சதவீதம் போன்ற விவரத்தை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : THE SECRETARY, INDIAN NAVY SPORTS CONTROL BOARD,7th Floor, Chankya Bhavan, INTEGRATED HEADQUARTERS, M MoD (NAVY), NEW DELHI 110021 விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 26-1-2020-ந் தேதியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-2-2020.
- இணைய முகவரி : www.joinindianarmy.nic.in
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது என்.சி.சி. 48-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1995 மற்றும் 1-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அத்துடன் அவர்கள் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-2-2020-ந் தேதியாகும்.
மேலும் இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : இளநிலை உதவியாளர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.
- TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : இளநிலை உதவியாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.
- இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
இளநிலை உதவியாளர் பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பி.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பப்பதிவு ஆரம்பமாகிறது. மார்ச் 9-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
- TN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
- இணைய முகவரி : http://kpmdrb.in
நிறுவனம்: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.
மொத்த காலியிடங்கள்: 80
பணியிடம்: காஞ்சிபுரம்
பணி: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 39
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650/-
பணி: ஓட்டுநர் - 05
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075
வங்கி: நகர கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,200 - 25,250
வங்கி: நகர கூட்டுறவு கடன் சங்கம்
பணி: அலுவலக உதவியாளர் - 07
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 34,700
வங்கி: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 35,150
பணி: அலுவலக உதவியாளர்- 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 27,610
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதும், இலகுரக ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள TN Cooperative Bank Recruitment 2020 அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு அறிவிப்பு லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020
TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
- TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : மதிப்பீட்டாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1300 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
- இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.
- TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவி பொறியாளர்.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.
- இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது.
உதவி என்ஜினீயர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஜனவரி 24-ந் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்குகிறது. பிப்ரவாி 24-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
வேலை - கால அட்டவணை
- AMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.
- JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.
- HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
- SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
- HCMADRAS RECRUITMENT 2019 | HCMADRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.01.2020.
- NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.
- BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
- NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2020.
- TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
AMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.
- AMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன், டிரைவர் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 78 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.
- இணைய முகவரி : www.amd.gov.in
10-ம் வகுப்பு, டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ., பி.டெக், பி.எஸ்சி. அறிவியல் படிப்புகள், எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு பணிகள் உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன.
அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டணம் விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 10-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.amd.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.
- JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : குரூப்-பி மற்றும் குரூப்-சி உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 162 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.
- இணைய முகவரி : www.jipmer.edu.in
இந்த பணிகளுக்கு 27-1-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கான வயது வரம்பு தளர்வை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
ஜெனரல் நர்சிங், மிட்வைப் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் நர்சிங் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை சோசியல் ஒர்க் படிப்பு, சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு திறன் பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
மற்றொரு அறிவிப்பின்படி நர்சிங் அதிகாரி, மெடிக்கல் லேபரேட்டரி, டெக்னாலஜிஸ்ட், பிசிக்கல் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணி களுக்கு 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜெனரல் நர்சிங், மிட்வைப், மெடிக்கல் லேப் சயின்ஸ், இளநிலை உடற்கல்வியியல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், நியூரோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 20-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு பிப்ரவரி 23-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விவரங்களை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
- HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
- இணைய முகவரி : https://www.hindustancopper.com/
இவை சார்ந்த பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-1-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம், குறிப்பிட்ட முகவரியை வருகிற 20-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
- SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8134 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
- இணைய முகவரி : www.sbi.co.in
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-1-2020-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் ஜனவரி 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி-மார்ச் மாதமும், முதன்மைத் தேர்வு ஏப்ரல் 2-வது வாரமும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.